மஞ்சள் பூசணி பூரி செய்ய தேவையான பொருட்கள்:
மஞ்சள் பூசணி – ஒரு கப்
கோதுமை மாவு – அரை கப்
வெல்லம் – அரை கப்
ஏலக்காய் – 2
உப்பு – ஒரு சிட்டிகை
செய்முறை:
முதலில் மஞ்சள் பூசணியையும் வெல்லத்தையும் துருவி எடுத்துக் கொள்ள வேண்டும். அதேசமயம் ஏலக்காயை பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது வெல்லத்தை சிறிதளவு தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கரைய வைக்க வேண்டும்.
வெல்லம் கரைந்த பின் வேறு ஒரு பாத்திரத்திற்கு வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை இரண்டு ஸ்பூன் அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு துருவிய மஞ்சள் பூசணியை சேர்த்து வேக விட வேண்டும்.
மஞ்சள் பூசணி நன்கு வெந்த பிறகு கோதுமை மாவையும் உப்பையும் சேர்த்து கலக்க வேண்டும்.
கலந்த பின் சூடு குறைந்ததும் சப்பாத்தி, பூரிக்கு பிசைவது போல பிசைந்து 20 நிமிடங்கள் வரை மூடி வைக்க வேண்டும்.
20 நிமிடங்கள் கழித்து மாவை உருட்டி பூரிகளாக தேய்க்க வேண்டும்.
இப்போது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்த பின் பூரிகளை பொறிக்க வேண்டும்.
சுவையான மஞ்சள் பூசணி பூரி தயார். இதனை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். எனவே நீங்களும் ஒரு முறை செய்து பாருங்க