Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்பொடுகை விரட்ட இந்த ஒரு டிப்ஸ் போதும்!

பொடுகை விரட்ட இந்த ஒரு டிப்ஸ் போதும்!

-

- Advertisement -

பொடுகை விரட்ட இந்த ஒரு டிப்ஸ் போதும்!இன்று ஆண்கள் பெண்கள் என இரு பாலர்களுக்கும் பொதுவான பிரச்சனையாக இருப்பது பொடுகு தொல்லை தான். இந்த பொடுகு என்பது பூஞ்சையினால் ஏற்படக் கூடியது. இவை தலையில் அரிப்பினை ஏற்படுத்துவதுடன் தலைமுடி வளர்வதையும் தடுக்கிறது. எனவே இதனால் விரைவில் வழுக்கை விழும் அபாயம் ஏற்படுகிறது. எனவே இயற்கையான முறையில் பொடுகினை தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.

குறிப்பாக பொடுகு அரிப்பு ஏற்படும் சமயங்களில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவது கூடாது. அதுமட்டுமில்லாமல் தலையினை அடிக்கடி கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதினால் அழுக்குகள் தலையில் படிந்து, மேலும் பொடுகுகள் அதிகரிக்கும் வாய்ப்பு குறைக்கப்படுகிறது.

இப்போது 10 சின்ன வெங்காயம் எடுத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் 50 மில்லி லிட்டர் தயிர் எடுத்துக் கொள்ள வேண்டும். சொல்லப்பட்ட பொருட்களின் சரியான அளவை எடுத்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் எந்தவித பலனும் கிடைக்காது.

இப்போது சின்ன வெங்காயத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் நறுக்கிய வெங்காயத்தினை 50 மில்லி லிட்டர் தயிருடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.பொடுகை விரட்ட இந்த ஒரு டிப்ஸ் போதும்!

இக்கலவையை 10 லிருந்து 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும் அப்போதுதான் வெங்காயத்தில் இருக்கும் சாறு தயிரில் ஊறி வரும்.

சிறிது நேரம் கழித்து இந்த கலவையை தலையில் தேய்த்து இருபது நிமிடங்கள் காய வைக்க வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து தலையினை நன்கு அலசி குளிக்க வேண்டும். எந்தவித ஷாம்புகளையும் பயன்படுத்தக் கூடாது. ஏனெனில் கெமிக்கல் நிறைந்த ஷாம்புகள் பக்க விளைவுகளை மட்டுமே ஏற்படுத்தும்.

மேலே கூறப்பட்ட இம்முறைகளை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் சில வாரங்களிலேயே பொடுகு காணாமல் போய்விடும்.

இம்முறையை ஒருமுறை பயன்படுத்தி பார்த்துவிட்டு எந்தவித ஒவ்வாமையும் ஏற்படவில்லை என்றால் தேவைப்படும் சமயங்களில் பயன்படுத்தலாம். இல்லையென்றால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

MUST READ