மஞ்சள் என்பது மிகச் சிறந்த கிருமி நாசினி ஆகும். அதிகமான கிருமிகளை நீக்க மஞ்சள் உதவி புரிகிறது. எனவே மஞ்சள் பொடியாக்கி சுத்தமான நல்லெண்ணையில் குலைத்து வெடிப்பு இருக்கும் பகுதிகளில் தடவி வர வெடிப்பு மறைய தொடங்கும்.
வறண்ட பாதம் உடையவர்கள் ஆயில் மசாஜ் செய்வதன் மூலம் அழகான பாதத்தை பெறலாம். ஆலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தி மசாஜ் செய்வதினால் வெடிப்புகள் குறைய தொடங்கும். குறிப்பு: பாதங்களில் கட்டிகள் உடையவர்கள் எண்ணெய் மசாஜ் செய்யும் போது அது அதிகம் ஆவதற்கு வாய்ப்புகள் உண்டு.

அண்ணாச்சி, பப்பாளி ஆகிய பழங்களை கூழாக வசித்து பாதங்களில் தடவி வர பாதம் பொலிவாக காணப்படும். மேலும் சாம்பார் வெங்காயத்தின் சாறு எடுத்து அதனை மஞ்சள் தூளுடன் கலந்து வெடிப்பு உள்ள பகுதிகளில் தேய்த்து வர பாத வெடிப்பு மறையும்.
வறண்டு காணப்படும் பாதங்களை வெதுவெதுப்பான நீரில் கழுவிய பின் ஆலிவ் எண்ணெயில் மசாஜ் செய்வதினால் பாத வெடிப்பு குணமடையும்.
இருப்பினும் இம்முறைகளை எல்லாம் ஒரு முறை பயன்படுத்தி பார்த்துவிட்டு எந்தவித ஒவ்வாமையும் ஏற்படவில்லை என்றால் தேவைப்படும் சமயங்களில் பயன்படுத்தலாம். இல்லையென்றால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.