தலைமுடி உதிர்வுக்கு தீர்வளிக்கும் கருஞ்சீரக எண்ணெய் எப்படி தயார் செய்வது என்பதை பார்க்கலாம்.
முதலில் 100 கிராம் கருஞ்சீரகத்தையும் 100 கிராம் வெந்தயத்தையும் மிக்ஸி சாரில் சேர்த்து நன்கு அரைத்து பொடியாக்கி கொள்ள வேண்டும். இந்த பொடியை வேறொரு பாத்திரத்தில் போட்டு அதில் 150 மில்லி லிட்டர் தேங்காய் எண்ணெயை ஊற்றி கலக்க வேண்டும். இப்போது ஒரு பெரிய அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து அதனை அடுப்பில் வைத்து சூடாக்க வேண்டும். தொடர்ந்து தேங்காய் எண்ணெய் கலவை வைத்திருக்கும் பாத்திரத்தை அப்படியே எடுத்து அந்த தண்ணீரில் வைத்து (டபுள் பாய்லிங் முறையில்) சூடு படுத்த வேண்டும். பின்னர் சிறிது நேரம் கழித்து எண்ணையை ஆற வைத்து வடிகட்டி அதை கண்ணாடி பாட்டிலில் ஊற்றி பயன்படுத்த வேண்டும்.
குறிப்பு: இந்த முறையில் எண்ணெய் தயாரிக்கும் போது சற்று கூடுதல் நேரம் எடுக்கும்.
அப்படி இல்லையென்றால் தேங்காய் எண்ணயுடன், கற்றாழை ஜெல் சேர்த்து கிளறி சூடு படுத்த வேண்டும். எண்ணெய் கொதிக்கும் சமயத்தில் கருஞ்சீரகம் மற்றும் வெந்தயம் ஆகியவற்றை பொடி செய்து சேர்க்க வேண்டும். அரை மணி நேரம் எண்ணெயை காய்ச்சி ஆற வைத்து வடிகட்டி பாட்டிலில் ஊற்றி வைத்து பயன்படுத்த வேண்டும்.
இந்த எண்ணையை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை தலையில் தேய்த்து மசாஜ் செய்து குடித்து வர உடல் சூடு தணியும். ஆண் – பெண் இருபாலருமே பயன்படுத்தலாம். கிட்டத்தட்ட ஒரு மாத காலம் வரை பயன்படுத்தினால் தான் நல்ல ரிசல்ட் கிடைக்கும். கருஞ்சீரகத்தில் உள்ள மருத்துவ குணங்கள் முடியை பலப்படுத்தி முடி உதிர்களை கட்டுப்படுத்தும்.
இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.