spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்குளிர்காலத்தில் ஏற்படும் ஒற்றைத் தலைவலியும் அதன் தீர்வுகளும்!

குளிர்காலத்தில் ஏற்படும் ஒற்றைத் தலைவலியும் அதன் தீர்வுகளும்!

-

- Advertisement -

ஒற்றை தலைவலி என்பது பொதுவானது. அதுவும் இந்த டிஜிட்டல் யுகத்தில் ஒற்றைத் தலைவலி ஏற்படவில்லை என்றால்தான் ஆச்சரியம். ஏனென்றால் நாள் முழுவதும் மொபைல் போன், லேப்டாப் ஆகியவைகளை பயன்படுத்துவது பலருக்கும் தலைவலியை ஏற்படுத்தும். குளிர்காலத்தில் ஏற்படும் ஒற்றைத் தலைவலியும் அதன் தீர்வுகளும்!அதிலும் குளிர்காலத்தில் ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்படுபவர்கள் அதிகம். சில சமயங்களில் தட்பவெப்பநிலை காரணமாக உடலில் பல பிரச்சனைகள் உண்டாகும். இதனால் தலைவலியும் ஏற்படக்கூடும். இந்த சமயத்தில் சரியான தூக்கம் இல்லாமல் இருந்தாலும், மொபைல் போன் அதிகம் பயன்படுத்துவதாலும் ஒற்றை தலைவலி பிரச்சினை அதிகமாகிறது. குளிர்காலத்தில் ஏற்படும் ஒற்றைத் தலைவலியும் அதன் தீர்வுகளும்!மேலும் வறட்சி மற்றும் கடுமையான குளிர்காலமாகவும் தலைவலி பிரச்சனை அதிகரிக்கும். குளிர்காலத்தில் சூரிய ஒளியின் பற்றாக்குறை ஏற்படுவதால் மூளையில் உள்ள செரோடோனின் ரசாயனம் சமநிலையற்றதாகி வருகிறது. இதனால் ஏற்றத்தாழ்வு ஏற்படின் ஒற்றைத் தலைவலி பிரச்சினை அதிகரிக்கிறது. அதுமட்டுமில்லாமல் சூரிய ஒளியின் பற்றாக்குறை உடலின் சர்க்காடியன் அமைப்பை சீர்குலைத்து தூக்க பிரச்சனைகளை உண்டாக்கும். இதனால் ஏற்படும் தூக்கமின்மை தான் ஒற்றைத் தலைவலிக்கு முக்கிய காரணமாக அமைகிறது. குளிர்காலத்தில் ஏற்படும் ஒற்றைத் தலைவலியும் அதன் தீர்வுகளும்!இருப்பினும் அதிக நேரம் மொபைல் போன் பயன்படுத்தாமல் கட்டாயம் எட்டு மணி நேரம் தூங்க வேண்டும். அதே சமயம் அதிக அளவில் நீரை எடுத்துக் கொள்வதும் உடலை நீரேற்றுத்துடன் வைத்துக் கொள்வது மிகவும் அவசியம்.

இருப்பினும் அதிக அளவில் தொந்தரவு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

MUST READ