Homeசெய்திகள்ரூ.4,500 கோடியில் திட்டம்… 60 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு: நிதின் கட்கரி அசத்தல் அறிவிப்பு..!

ரூ.4,500 கோடியில் திட்டம்… 60 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு: நிதின் கட்கரி அசத்தல் அறிவிப்பு..!

-

- Advertisement -

நாடு 22 லட்சம் திறமையான ஓட்டுநர்கள் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது என்று மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இன்று மக்களவையில் பேசிய அவர், ”முறையான பயிற்சி வசதிகள் இல்லாததால் பல விபத்துகள் நடக்கின்றன. ​ஓட்டுநர்களுக்கான பயிற்சி நிறுவனங்களை அமைக்க ரூ.4,500 கோடி திட்டத்தை மையம் தொடங்கியுள்ளது.

nitin gadkari

உலக வங்கி அறிக்கையின்படி, இந்தியாவில் 22 லட்சம் ஓட்டுநர்கள் பற்றாக்குறை இருக்கிறது. நாட்டில் சரியான ஓட்டுநர் பயிற்சி வசதிகள் இல்லாதது பல விபத்துகளுக்கும் இறப்புகளுக்கும் வழிவகுக்கிறது.

நாடு முழுவதும் ஓட்டுநர் பயிற்சி நிறுவனங்களை அமைப்பதற்காக சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் ரூ.4,500 கோடி மதிப்பிலான திட்டத்தைத் தொடங்கி உள்ளது. இதன் கீழ் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலும் படிப்படியாக 1,600 நிறுவனங்கள் அமைக்கப்படும். இதன் மூலம் 60 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

ஓட்டுநர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், மாநில ஓட்டுநர் பயிற்சி மையங்கள், ஓட்டுநர் பயிற்சி மையங்கள் ஆகியவற்றை அமைப்பதற்கு பொருத்தமான திட்டங்களை அனுப்புமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துகளால் சுமார் 1.8 லட்சம் பேர் இறக்கின்றனர். அவர்களில் பலர் பயிற்சி பெறாத ஓட்டுநர்களால் இறக்கின்றனர்” என்று கட்கரி கூறினார்.

 

MUST READ