spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்அடி சறுக்கும் அண்ணாமலை... சோர்ந்து போன பாஜக தொண்டர்கள்..!

அடி சறுக்கும் அண்ணாமலை… சோர்ந்து போன பாஜக தொண்டர்கள்..!

-

- Advertisement -

வெளிநாட்டு படிப்பு படித்துவிட்டு தமிழக பாஜக திரும்பி வந்தாலும்கூட இன்னும் அக்கட்சி தொண்டர்கள் சோர்வில் இருந்து வருகிறார்கள்.

அண்ணாமலை பாஜக தலைவரான பிறகு வேலூர் மாவட்டத்தில் பெரிய அளவில் கட்சியில மாற்றம் நடந்தது. இந்த மாற்றத்தில் ஆரம்பத்தில் இருந்து கட்சி பொறுப்புக்கு வந்தவர்களின் கருத்துகளை கேட்காமலேயே மாற்றம் நடந்ததால் அப்போதே வேலூர் மாவட்ட பாஜகவில் முணுமுணுப்புகள் எழுந்தன.முதலமைச்சருக்கு நெருக்கமானவருக்கு குற்ற வழக்குகள் துறை இயக்குனராக நியமனம் - அண்ணாமலை கண்டனம்

we-r-hiring

அதற்கேற்ப அண்ணாமலை தலைவராவதற்கு முன்பு வேலுரில் பொறுப்புகளில் இருந்தவர்கள் அடிக்கடி மக்கள் பிரச்னைகளை முன்வைத்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் இப்போது அதுபோன்ற போராட்டங்களில் ஈடுபடவில்லை. இதுபற்றி கடந்த தேர்தலின்போதே தலைமைக்கு தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.

இப்போது அண்ணாமலை வௌிநாட்டுக்கு போய் வந்ததும் ஏதாவது நடக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்தும் பயனில்லை. அதற்கேற்ப நேற்று நடந்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஆர்ப்பாட்டத்தில் கூட, பாஜகவின் பழைய ஆட்களின் முகங்கள்தான் தென்பட்டது. இதேபோல் சென்றால் 2026 தேர்தலில் என்ன செய்வது? இதுவரை வேலூர் மாவட்டத்தில் பூத் கமிட்டிகளே சரியாக கட்டமைக்கப்படவில்லை என்பதுதான் அடிமட்ட பாஜக -வினரின் ஆதங்கமாக உள்ளது என்கிறார்கள்.

MUST READ