Homeசெய்திகள்அரசியல்மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி அமோக வெற்றி; அடுத்த முதல்வர் இவர் தான்

மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி அமோக வெற்றி; அடுத்த முதல்வர் இவர் தான்

-

- Advertisement -

மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி அமோக வெற்றி; அடுத்த முதல்வர் இவர் தான்

மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக கூட்டணி மூன்றாவது முறையாக மாபெரும் வெற்றியை குவித்து எதிர்க்கட்சிகளை மண்ணைக்கவ்வ வைத்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் 288 தொகுதிகளுக்கு கடந்த 20 தேதி தேர்தல் நடந்தது. 23 ஆம் தேதி காலையில் இருந்து வாக்கு எண்ணிக்கை வேகமாக நடைபெற்று வருகிறது. காலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து பாஜக கூட்டணி முன்னிலையில் இருந்து வருகிறது. பாஜக போட்டியிட்ட 145 தொகுதிகளில் 118 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இது கடந்த 2019 தேர்தலில் பெற்ற வெற்றியை விட 81 சதவீதம் அதிகம். அதேபோன்று பாஜக கூட்டணியில் உள்ள ஏக்நாத் ஷிண்டே தலைமையில் உள்ள சிவசேனா 55 இடங்களில் வெற்றி பெற்று தாங்கள் தான் உண்மையான சிவசேனா என்பதை நிரூபித்துள்ளனர். அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி 31 இடங்களை கைப்பற்றி ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த தேர்தலில் உத்தவ் தாக்கரே, சரத்பவார் மற்றும் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. இந்த நிலையில் மகாராஷ்டிராவில் தற்போது யார் முதல்வர் என்ற போட்டி கடுமையாக விவாதிக்கப்பட்டு வருகிறது. நான்கு மாதத்திற்கு முன்பு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி அதிக தொகுதிகளை கைப்பற்றி பாஜகவிற்கு அதிர்ச்சியை தந்தது. தற்போது பாஜக கூட்டணி அமோக வெற்றியை குவித்ததற்கு காரணம் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் அரசியல் வியூகம் தான் என்று கூறப்படுகிறது.

மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி அமோக வெற்றி; அடுத்த முதல்வர் இவர் தான்

தமிழகத்தில் குடும்பத் தலைவிக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை திட்டத்தை அப்படியே மகாராஷ்டிரா மாநிலத்தில் குடும்பத் தலைவிக்கு மாதம் 1500 ரூபாய் வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார். இந்த திட்டத்தை பாஜக எதிர்த்தது. ஆனால் ஷிண்டே துணிந்து திட்டத்தை அமல்படுத்தினார். இந்த திட்டத்தினால் அந்த மாநிலத்தில் இரண்டு கோடி பெண்கள் பயனடைந்தார்கள். அது அப்படியே ஓட்டாக மாறி பாஜக கூட்டணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றது.

பாஜக கூட்டணியை வெற்றி அடைய வைத்த ஷிண்டேவிற்கு மீண்டும் முதல்வர் பதவி கிடைக்குமா? அல்லது மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்க்கு முதல்வர் பதவி வழங்கப்படுமா என்ற விவாதம் நாடு முழுவதும் நடந்து வருகிறது.

தேவேந்திர பட்னாவிஸ், ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் ஆகியோர் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். ஒருவருக்கு ஒருவர் இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். இது குறித்து தேவேந்திர பட்னாவிஸிடம் உங்களில் யார் முதல்வர் என்று நிருபர்கள் கேட்டபோது, எங்களுக்குள் யார் முதல்வர் என்பதில் எவ்வித பிரச்சினையும் இல்லை. இன்னும் இரண்டு நாளில் மூன்று பேரும் அமர்ந்து பேசி தீர்த்துக் கொள்வோம் என்றார். அதேபோன்று தற்போதைய முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவிடம் இந்த கேள்வியை கேட்டபோது, அவரும் அதே பதிலை தெரிவித்துள்ளார். மேலும் இன்னும் முழுமையாக வாக்கு எண்ணிக்கை முடியவில்லை. முடிந்ததும் யார் முதல்வர் என்பதை முடிவு செய்து கொள்வோம்.எந்த பிரச்சனையும் இல்லை என்றார்.

மகாராஷ்டிராவில் பால்தாக்கரே உருவாக்கிய சிவசேனா கட்சியை உடைத்து, அக்கட்சியின் புதிய தலைவராக ஏக்நாத் ஷிண்டேவை உருவாக்கி கட்சியை அவரிடம் ஒப்படைத்தது பாஜக. அவரை முதலமைச்சராகவும் ஆக்கியது பாஜக. ஆனால் கிடைத்த வாய்ப்பை அழகாக பயன்படுத்திக் கொண்டவர் ஷிண்டே. தற்போது அந்த கூட்டணியை நவீன சாணக்கியராக இருந்து வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றவர் ஏக்நாத் ஷிண்டே என்று தைரியமாக சொல்லலாம். அந்த ஏக்நாத் ஷிண்டே தான் மீண்டும் முதல்வராக வரவேண்டும் என்று மகாராஷ்டிரா மக்கள் விரும்புகிறார்கள். அதுதான் நடக்கப்போகிறது.

நிதீஷ்குமாரை போல ஏக்நாத் ஷிண்டேவுக்கு வாய்ப்பு தருமா பாஜக..? கூட்டணியில் விரிசல்?

MUST READ