spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்மகாராஷ்டிரா அரசில் கோலோச்சும் 3 பெண்கள்: மகளிரை முன்னிருத்தும் மஹாயுதி

மகாராஷ்டிரா அரசில் கோலோச்சும் 3 பெண்கள்: மகளிரை முன்னிருத்தும் மஹாயுதி

-

- Advertisement -

மகாராஷ்டிராவில் மஹாயுதி கூட்டணியின் அமோக வெற்றிக்கு காரணம் முந்தைய ஆட்சியில் பெண்களுக்கான உதவித்தொகை முக்கியமாகக் கருதப்பட்டது. அதனால் சட்டசபைத் தேர்தலில் பெண்களின் வாக்கு சதவீதமும் எட்டு சதவீதம் உயர்ந்துள்ளது. தற்போது மகாராஷ்டிராவில் தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை நாக்பூரில் நடைபெற்ற அமைச்சரவை விரிவாக்கத்தின் போது பெண் அதிகாரிகளின் முக்கியத்துவம் வெளிப்பட்டுள்ளது.

மாநில காவல்துறை தலைமை இயக்குநராக (டிஜிபி) ஐபிஎஸ் ரஷ்மி சுக்லா, தலைமைச் செயலாளர் சுஜாதா சௌனிக், முதல்வரின் முதன்மைச் செயலாளராக அஷ்வினி பிடே ஆகிய பெண்கள் முக்கியப் பதவிகளில் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.

we-r-hiring

நாக்பூரில், முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தனது அமைச்சரவை விரிவாக்கத்தில் நான்கு பெண்களை அமைச்சர்களாக்கி உள்ளார். இதில், 3 பேர் பாஜகவில் இருந்தும், ஒருவர் அஜித் பவாரின் என்சிபியிலிருந்தும் அமைச்சர்களாக பதவியேற்றனர். பெண் அமைச்சர்களில் பங்கஜா முண்டே, மேக்னா போர்டிகர், மாதுரி மிசல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். என்சிபியை சேர்ந்த அதிதி தட்கரே அமைச்சராக உள்ளார்.

மஹாயுதி கூடணியில் மாநில ஆட்சியில் பெண்கள் இருக்கும் நிலையில், மற்ற அமைச்சகங்களிலும் அவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மாநில சட்ட மேலவையின் தலைவர் நீலம் கோர்ஹே நியமிக்கப்பட்டுள்ளார்.

சுஜாதா சௌனிக்: 1987 பேட்ச் ஐ.ஏ.எஸ். இவர் மகாராஷ்டிராவின் முதல் பெண் தலைமைச் செயலாளர் ஆவார். அவர் ஜூன் 30, 2024 அன்று தலைமைச் செயலாளராக ஆனார். அவர் ஜூன் 2025 வரை தலைமைச் செயலாளராக இருப்பார். சுஜாதா சௌனிக் முன்னாள் ஐஏஎஸ் மனோஜ் சௌனிக் மனைவி. மனோஜ் சவுனிக் தலைமைச் செயலாளராகவும் இருந்துள்ளார். ஹரியானாவைச் சேர்ந்த சுஜாதா, பீகாரைச் சேர்ந்த மனோஜ் சவுனிக் என்பவரை மணந்தார்.

அஸ்வினி பிடே,1995 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி. மே 25, 1970ல் பிறந்த ஐஏஎஸ் மனிஷா பிடே, மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர். அவர் முதல்வரின் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மெட்ரோ எம்.டி.யாக ‘மும்பை மெட்ரோ வுமன்’ புகழ் பெற்றார்.

ரஷ்மி சுக்லா 1988 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி. மகாராஷ்டிரா டிஜிபியாக பதவியேற்ற முதல் பெண் அதிகாரி இவர்தான். பதவி நீட்டிப்பு காரணமாக 2026 வரை மகாராஷ்டிரா டிஜிபியாக ராஷ்மி சுக்லா இருப்பார். முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸின் விருப்பமான அதிகாரிகளில் சுக்லா கருதப்படுகிறார்.

மகாராஷ்டிரா தேர்தலுக்கு முன்பு, காங்கிரஸின் ஆட்சேபனையைத் தொடர்ந்து, டிஜிபி ரஷ்மி சுக்லாவை தேர்தல் ஆணையம் நீக்கியது. இருப்பினும் சுஜாதா சவுனிக் தலைமைச் செயலாளராக இருந்தார். இப்போது தேர்தலுக்குப் பிறகு முதல்வரான ஃபட்னாவிஸ், அரசாங்கத்தில் மிகவும் சக்திவாய்ந்தவராகக் கருதப்படும் முதல்வரின் முதன்மைச் செயலாளர் பதவியில் அஷினி பிடேவை நியமித்துள்ளார்.

MUST READ