
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு காங்கிரஸ் எதிரானது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

ஹரியானா மாநிலத்தில் உள்ள பஞ்ச்குலா மாவட்டத்தில், நடந்த நிகழ்ச்சியில் அமித்ஷா பேசியபோது, ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் இந்தாண்டு இறுதியில் நடைபெற உள்ளது. பா.ஜ.க முழுப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் எனவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு காங்கிரஸ் எதிரானது என கூறியுள்ளார். 1980ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா ஓ.பி.சி., இடஒதுக்கீட்டை எதிர்த்தார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் இடஒதுக்கீட்டைப் பறித்து முஸ்லிம்களுக்கு வழங்கியுள்ளது. அவர்கள் இங்கு ஆட்சி அமைத்தால் இங்கேயும் அதுதான் நடக்கும். எனவே ஹரியானாவில் முஸ்லீம் இடஒதுக்கீட்டை அனுமதிக்க மாட்டோம் என்று உறுதியளிக்க விரும்புகிறேன் என அமித்ஷா தெரிவித்துள்ளார்.


