பேராசிரியர் க.அன்பழகனின் 101 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு முதரமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மறைந்த திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்பழகனின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்.

மறைந்த பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் திருவாரூர் மாவட்டத்திலுள்ள காட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர். இவரின் இயற்பெயர் இராமையா. திராவிடர் சிந்தனைகளால் ஆர்வம் கொண்டு தனது பெயரை அன்பழகன் என்று மாற்றிக் கொண்டார். அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.ஏ. தமிழ் படித்தவர். பின்னர் 1947 ஆம் ஆண்டு முதல் 1957 ஆம் ஆண்டு வரை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றினார். இதனைத் தொடர்ந்து 1977 ஆம் ஆண்டு திமுக பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.
கடைசியாக 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். அவரது அரசியல் வாழ்வில் சட்டமன்ற உறுப்பினராக 9 முறையும் நாடாளுமன்ற உறுப்பினராக ஒரு முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பணியாற்றியவர். திமுக ஆட்சி காலத்தில் சுகாதாரம், சமூகத்துறை, நிதித்துறை மற்றும் கல்வித்துறை அமைச்சராகவும் செயல்பட்டார். மேலும் இவர் எழுத்தாளராக பல தமிழ் சமூக கட்டுரைகளையும், நூல்களையும் எழுதி உள்ளார்.
இந்நிலையில் அவரது நூற்றாண்டு நிறைவு விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவுருவா படத்திற்கு அஞ்சலி செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். இதனைத் தொடர்ந்து அன்பழகன் நினைவு நூற்றாண்டை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கு புத்தகங்களை முதலமைச்சரும் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.