spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்பாஜக கூட்டணி குறித்து கீ.வீரமணி விமர்சனம்

பாஜக கூட்டணி குறித்து கீ.வீரமணி விமர்சனம்

-

- Advertisement -

பாஜகவினர் இந்துக்களை ஒன்று சேர்க்கிறோம் என்று மாநாட்டை அமைத்தார்கள். ஆனால் அவர்கள் கூட்டணியையே சரியாக அமைப்பார்களா எனக் கேள்வி எழுகிறது என திராவிடர் கழக தலைவர் கீ வீரமணி தெரிவித்துள்ளாா்.பாஜக கூட்டணி குறித்து கீ.வீரமணி விமர்சனம்முன்னாள் பிரதமர் வி.பி சிங் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலை, மாநில கல்லூரி வளாகத்தில் உள்ள அவரது சிலைக்குக் கீழ் வைக்கப்பட்ட திருவுருவப்படத்திற்கு திராவிடர் கழக தலைவர் கீ வீரமணி  மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், சமூக நீதி காவலர் வி பி சிங் பதவியை விரும்பாதவர். மக்கள் மன்றத்திற்கான சேவையையே விரும்பினார். அதனால் தான் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் அவர் தமிழகத்தில் அதிகப்படியாக மதிக்கப்படுகிறார்.

we-r-hiring

கலைஞர் காலத்தில் இருந்து திராவிட கழகம் மற்றும் திராவிட இயக்கங்கள் அவரிடத்தில் ஒரு தனி ஈடுபாடு கொண்டிருந்தது. அவருக்கு முதல் முறையாக சிலை திறந்த பெருமை தமிழகத்தையும், திராவிட மாடல் ஆட்சியையே சாரும். இன்றைய காலகட்டத்தில் அவருடைய பணியை தொடர வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்றாா்.

தொடர்ந்து பேசிய அவர், பாஜகவினர் இந்துக்களை ஒன்று சேர்க்கிறோம் என்று முருகன் மாநாட்டை அமைத்தார்கள். ஆனால்,கூட்டணியை ஒன்றாக சேர்த்தார்களா என்ற கேள்வி  தற்போது எழுகிறது என்று விமர்சித்துள்ளாா்.

பாஜக கூட்டணியை உடைப்பதற்கான முயற்சி நிறைவேறாது-நயினார் நாகேந்திரன்

MUST READ