மும்மொழி கொள்கையை ஆதரித்து , இரு மொழி கொள்கைக்கு எதிராக பேசி வரும் அண்ணாமலை தமிழகத்தில் தனித்து விடப்படுவார் என சேலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் பேட்டி.
மும்மொழி கொள்கையை கைவிடாவிட்டால், தமிழகம் முழுவதும் தபால் நிலையங்கள், ரயில் நிலையங்கள் என ஒன்றிய அரசு அலுவல்களில் உள்ள இந்தி எழுத்துகளை அழிக்கும் போராட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் விரைவில் நடத்தப்படும் என்றும் முத்தரசன் எச்சரிக்கை.
தாய் மொழியான தமிழை பாதுகாக்கவும், தமிழ் மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவதிலும் தமிழக முதல்வர் கொள்கை பிடிப்போடு திறம்பட செயலாற்றி வருகிறார் எனவும் புகழாரம்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து கூறும் போது, தற்போது இந்தியாவில் ஜனநாயக ஆட்சி நடைபெறுகிறதா? அல்லது மன்னர் ஆட்சி நடைபெறுகிறதா? என்ற கேள்வி எழுந்து உள்ளதாகவும் , தமிழகத்திற்கு தர வேண்டிய கல்வி நிதி, பேரிடர் நிதி உள்ளிட்ட எந்த ஒரு நிதியும் வழங்காமல் ஒரு தலை பட்சமாக செயல்பட்டு வருவது கண்டிக்க தக்கது என்று கூறிய அவர், தேசிய கல்வி கொள்கை என்பது திமுகவிற்கு மட்டும் பாதிப்பை ஏற்படுத்தும் கொள்கை அல்ல.
இது ஒட்டு மொத்த தமிழக மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதாலேயே இதனை எதிர்ப்பதாகவும், இந்த புதிய கல்வி கொள்கை என்பது அரசு பள்ளி மாணவ , மாணவிகளை பாதியிலிலேயே நிறுத்தும் நிலையை உருவாக்கி விடும் என்பதாலேயே எதிர்க்கிறோம் என்றார். ஒன்றிய அரசால் செயல்பட கூடிய 49 நவோதியா பள்ளியில் ஒரு தமிழ் ஆசிரியர்கள் கூட இல்லை என்பதும் இந்த கல்வி கொள்கை என்பது ஆர் எஸ் எஸ் யின் கொள்கையான ஒரே நாடு ஒரே மொழி என்ற நிலையை செயல்படுத்திடவே ஒன்றிய அரசு இதனை அமல்படுத்திட முயற்சி செய்வதாகவும், நமது தாய்மொழியை காத்திட மொழிப்போர் உருவாகி உள்ளதாக முத்தரசன் கூறினார். இந்த விவகாரத்தில் அண்ணாமலை தனிமைப்படுத்தப்படுவார்.
மும்மொழி கொள்கையை கைவிடாவிட்டால் , தமிழகம் முழுவதும் தபால் நிலையங்கள் , ரயில் நிலையங்கள் என ஒன்றிய அரசு அலுவல்களில் உள்ள இந்தி எழுத்துகளை அழிக்கும் போராட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் விரைவில் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
தொகுதி சீரமைப்பு குறித்து பேசிய அவர், முதலமைச்சர் கூட்டி உள்ள அனைத்து கட்சி கூட்டம் மிகவும் முக்கியதுவம் வாய்ந்தது என்றும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் கூறிய அவர், ஒட்டு மொத்த மக்களின் பிரச்சனை என்பதால் இதற்கு ஆளுங்கட்சி, தோழமை கட்சி மட்டுமல்ல எதிர்க்கட்சிகள் என அனைத்து கட்சிகளும் பங்கேற்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.