- Advertisement -
எடப்பாடியே வெளியேறு! வெளியேறு! பரபரப்பு போஸ்டர்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி மற்றும் முதுகுளத்தூரில் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அந்த போஸ்டரில், “வெளியேறு! வெளியேறு அதிமுகவை 8 முறை தோல்வி பெற செய்த எடப்பாடியே வெளியேறு! சமத்துவ பேரியக்கத்தை சமுதாய இயக்கமாக மாற்றிய எடப்பாடியே வெளியேறு! ஒற்றைத் தலைமை வேண்டாம் ஒன்றிணைவோம் கழக ஒருங்கிணைப்பாளர் ஐயா…. ஓபிஎஸ் தலைமையில்” என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
கோகமணி மற்றும் அம்மா சரவணன், மற்றும் அம்மா சரவணன், வினோத்குமார், சீமைச்சாமி ஆகியோர் பெயர் இட்டு இந்த போஸ்டர்கள் கமுதி, முதுகுளத்தூர் முழுவதும் பேருந்து நிலையம் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் ஒட்டப்பட்டு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.