spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்விசிக கொடிமரம் விவகாரம் - வருவாய் ஆய்வாளர் பணி இடை நீக்கம்

விசிக கொடிமரம் விவகாரம் – வருவாய் ஆய்வாளர் பணி இடை நீக்கம்

-

- Advertisement -

விசிக கொடிமரம் விவகாரம் - வருவாய் ஆய்வாளர் பணி இடை நீக்கம்
மதுரை வெளிச்சநத்தம் கிராமத்தில் விசிக கட்சியினர் கொடி கம்பம் வைத்த விவகாரம் தொடர்பாக கிராம நிர்வாக உதவியாளர்,கிராம நிர்வாக அலுவலர்,வருவாய் ஆய்வாளர் ஆகியோர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை மாவட்டம் சத்திரபட்டி வெளிச்சநத்தம் கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக 25 அடி உயரத்தில் இருந்த  கொடி கம்பத்தை 45 அடிக்கு உயர்த்தி வைத்தனர் இதற்கு முறையாக அனுமதி பெறவில்லை என கூறப்படுகிறது.

we-r-hiring

இதற்கு வருவாய் அலுவலர்கள், போலீசார் அனுமதி மறுத்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் கடந்த டிசம்பர் 7-ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வெளிச்சநத்தம் கிராமத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து அரசு அலுவலர்கள், காவல்துறை அதிகாரிகள் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தி கொடி மரத்தை ஏற்றுவதற்கு வருவாய் அலுவலர்கள் அனுமதி வழங்கினர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 45 அடி கொடி கம்பம் நடுவதில் முறையாக செயல்பட்டு கொடி கம்பம் நட்டதை தடுக்க தவறிய காரணத்திற்காக கிராம நிர்வாக உதவியாளர் பழனியாண்டி, கிராம நிர்வாக அலுவலர் பரமசிவம்,சத்திரபட்டி வருவாய் ஆய்வாளர் அனிதா ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

ராகவா லாரன்ஸின் ‘பென்ஸ்’ படத்தில் இணையும் நடிகர் மாதவன்!

MUST READ