Homeசெய்திகள்அரசியல்‘அது ஆபத்து... அதனால்தான் தடுத்தேன்...’: ரஜினியிடம் நேரில் பம்மிய சீமான்

‘அது ஆபத்து… அதனால்தான் தடுத்தேன்…’: ரஜினியிடம் நேரில் பம்மிய சீமான்

-

- Advertisement -

ரஜினியை முன்பு கண்ணாபின்னாவென விமர்சித்த சீமான் இப்போதும் நட்பு பாராட்டுகிறார். அக்டோபர் 27-ம் தேதிவரை நட்பு பாராட்டிய விஜய்யை இப்போது கண்ணாபின்னாவென விமர்சிக்கிறார். `அரசியலில் நிரந்த நண்பனும் எதிரியும் இல்லை போல. அன்று யார பாத்துடா சங்கினு சொல்லுற? சங்கினு சொன்னா செருப்பால அடிப்பேன்’ன்னு செருப்பை தூக்கி காட்டினார் சீமான்! இன்று, ரஜினியை சந்தித்து வந்த பிறகு ‘சங்கி என்றால் சக தோழன். சங்கி என்றால் நண்பர்’’ என்கிறார். என்ன நடக்கிறது? ஏனிந்த மாற்றம்? ரஜியுடன் என்ன பேசினார் சீமான்?

இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்த, உடனிருந்த அரசியல் விமர்சகர் ரவீந்​திரன் துரைசாமி அதைப்பற்றி விரிவாக கூறியுள்ளார். “ரஜினி​காந்தை, நவம்பர் 8-ல் தனது பிறந்​த​நாளின் போது சந்தித்து ஆசி பெற சீமான் விரும்​பி​னார். இந்த தகவல் ரஜினிக்கு தெரிவிக்​கப்​பட்​ட​வுடன் அவர் உடனே சம்மதம் தெரிவித்​தார்.

ஆனால், அவர் படப்பிடிப்பில் இருந்​த​தா​லும், சீமான் தொடர் சுற்றுப்​பயணத்தில் இருந்​த​தாலும் அந்த சந்திப்பு 21-ம் தேதி மாலை ரஜினியின் இல்லத்தில் நடந்தது. சினிமா, அரசியல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக இருவரும் இரண்டே கால் மணி நேரம் பேசினார். 6 மணிக்கு தொடங்கிய சந்திப்பு இரவு 8.30 மணியளவில் முடிவுக்கு வந்தது. ரஜினியும் சீமானுக்​குமான முதல் சந்திப்பு இது. மீண்டும் குடும்பத்​துடன் வந்து சந்திப்பதாக சீமான் தெரிவித்​துள்ளார்.

தனது கட்சியின் கொள்கைகள், திமுக, பாஜக செயல்​பாடுகள் குறித்து சீமான் ரஜினிக்கு விளக்கமாக விவரித்துச் சொன்னார். அதையெல்லாம் குறுக்கீடு செய்யாமல் கவனமாக கேட்டுக்​கொண்டார் ரஜினி. ‘அரசியல் ஆபத்தானது. நீங்கள் அரசியலுக்கு வராததால்தான் இப்போது நிம்ம​தியாக இருக்​கிறீர்கள்’ என்று சீமான் சொன்னதைக் கேட்டு ரஜினி சிரித்தார்.

இந்திய அளவில், 8 சதவீத வாக்குகளை தனித்து நின்று பெற்ற கட்சி நாதக மட்டுமே என்று சீமான் சொன்னார். அப்போது, ‘நான் ஒரு சாமானியனாக இருந்து, இந்த உயரத்தை அடைந்தது போல், நீங்களும் சமானியனாக இருந்து, எவ்வித பின்புலமும் இல்லாமல் இந்த உயரத்தை தொட்டுள்​ளீர்கள். நீங்கள் இன்னும் மேலே வருவீர்கள்’ என்று ரஜினி மனம் திறந்து பாராட்​டி​னார்” எனத் தெரிவித்துள்ளார் ரவீந்​திரன் துரைசாமி.

எது எப்படியோ, சொந்தக் கட்சி சலசலப்பு​கள், விஜய் கட்சியினரின் விமர்சனம் என ரொம்பவே மனம் வாடி இருந்த சீமான், ரஜினி​யுடனான சந்திப்புக்கு பிறகு புதுத் தெம்போடு வலம் வருவதாகச் சொல்கிறார்கள் நாதக தம்பிகள்.

MUST READ