பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் வில்வித்தை பிரிவில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
33-வது ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்ற வருகிறது. இந்த தொடரில் இன்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு வில்வித்தை போட்டியில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி, நெதர்லாந்து வீராங்கனை ரொப்பின் உடன் மோதினார். இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தீபிகா குமாரி 6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முநதைய சுற்றுக்கு முன்னேறினார். இந்த போட்டியில் அவர் ஜெர்மனியின் மிஷலி உடன் மோத உள்ளார்.
இதேபோல் மகளிர் ஒற்றையர் பிரிவில் நடந்த மற்றொரு வில்வித்தை போட்டியில் இந்திய வீராங்கனை பஜன் கவுர் வெற்றி பெற்று காலிறுதிக்கு முநதைய சுற்றுக்கு முன்னேறினார்.
நடப்பு ஒலிம்பிக் தொடரில் இந்தியா இதுவரை 2 வெண்கல பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளது. இந்த நிலையில் 6-வது நாளான இன்று பேட்மிண்டன், வில்வித்தை உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் வெற்றி பெற்று அடுத்த சுற்றுகளுக்கு முன்னேறியுள்ளனர்.