Homeசெய்திகள்விளையாட்டுஒருநாள் தொடரைக் கைப்பற்றி இந்திய அணி அசத்தல்!

ஒருநாள் தொடரைக் கைப்பற்றி இந்திய அணி அசத்தல்!

-

 

ஒருநாள் தொடரைக் கைப்பற்றி இந்திய அணி அசத்தல்!
Photo: BCCI

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 200 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று, தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.

தணிக்கைத் துறை இயக்குநர் அப்துல் சலாம் பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவு!

பிரையன் லாரா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 351 ரன்களை குவித்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக, ஹர்திக் பாண்டியா 70 ரன்களையும், சுப்மன் கில் 85 ரன்களையும், இஷான் கிஷன் 77 ரன்களையும், சஞ்சு சாம்சன் 51 ரன்களையும் எடுத்துள்ளனர்.

352 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 35.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 151 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 200 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதோடு, ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.

கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 12ஆவது நபர் கைது!

இந்திய அணி தரப்பில், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும், ஜெயதேவ் உனட்கட் 1 விக்கெட்டையும், முகேஷ் குமார் 3 விக்கெட்டுகளையும், ஷர்துல் தாகூர் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.

MUST READ