Homeசெய்திகள்விளையாட்டு சிறிய வயது மோட்டார் பைக் பந்தய வீரர் ஸ்ரேயாஸ் ஹரீஷ் மரணம்

 சிறிய வயது மோட்டார் பைக் பந்தய வீரர் ஸ்ரேயாஸ் ஹரீஷ் மரணம்

-

- Advertisement -

 சிறிய வயது மோட்டார் பைக் பந்தய வீரர் ஸ்ரேயாஸ் ஹரீஷ் மரணம்

பைக் பந்தயத்தில் பல்வேறு நாடுகளில் கலந்து கொண்டு பதக்கங்களை வென்று வந்த பெங்களூருவை சேர்ந்த 13 வயது ஸ்ரேயாஸ் ஹரிஷ் சென்னை அருகே நடைபெற்ற பைக் பந்தயத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரை சேர்ந்த ஸ்ரேயாஸ் ஹரிஷ், இந்தியாவில் மட்டுமல்ல ஸ்பெயின், மலேஷியா, உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நடைபெற்ற இருசக்கர வாகன பந்தயங்களில் கலந்து கொண்டு பதக்கங்களை வென்று இந்தியாவிற்கே பெருமை சேர்த்தவர் ஆவர். இந்த நிலையில் சென்னை இருங்காட்டுக்கோட்டையில் நடைபெற்ற இந்திய அளவிலான இருசக்கர வாகன சேம்பியன் ஷிப் போட்டியில் கலந்து கொண்டார்.

 சிறிய வயது மோட்டார் பைக் பந்தய வீரர் ஸ்ரேயாஸ் ஹரீஷ் மரணம்

MRF MMSC FMSC இந்தியன் நேஷனல் மோட்டார் சைக்கிள் பந்தய சாம்பியன்ஷிப்- 23 போட்டியில் 3 ஆவது சுற்று ஆரம்பத்திலேயே ஸ்ரேயாஸ் ஹரிஷ் வளைவு ஒன்றில் திரும்பும் போது நிலைதடுமாரி வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஸ்ரேயாஸ் ஹரிஷ் வாகனம் பல அடிகளுக்கு உருண்டு சென்று விழுந்தது. இந்த விபத்தில் இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஹரிஷ் தலையில் படுகாயம் அடைந்தது. உடனடியாக அங்கு இருந்தவர்கள் ஸ்ரேயாஸ் ஹரிஷை மீட்டு முதல் உதவி செய்து பின்னர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். விரைவில் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்ளவிருந்த நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்த ஸ்ரேயாஸ் ஹரிஷ் போட்டியின் போது உயிரிழந்தது மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிர் இழப்பை தொடர்ந்து தற்போது நடைபெற்று வந்த போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

 சிறிய வயது மோட்டார் பைக் பந்தய வீரர் ஸ்ரேயாஸ் ஹரீஷ் மரணம்

இளம் மோட்டார் பைக் பந்தய வீரர் ஸ்ரேயாஸ் ஹரீஷ் பெங்களூருவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தனது 12வது வயதில் வித்தியாசமான அடையாளத்தை உருவாக்கியுள்ளார்.மோட்டார் பைக் பந்தய வீரரான ஸ்ரேயாஸ், உலக பந்தயத்திற்கு தகுதி பெற்ற முதல் இந்தியர் ஆவார்.

சமீபத்தில் அவர் FIM MiniGP உலகத் தொடருக்குத் தகுதி பெற்றுள்ளார். இந்தியாவின் முதல் ‘மினி ஜிபி’ சாம்பியனும் ஷ்ரேயாஸ்தான். இளம் மோட்டார் பைக் பந்தய வீரரான ஸ்ரேயாஸ் ஹரீஷ், சிறுவயதில் இருந்தே பைக் ஓட்டுவதில் ஆர்வம் கொண்டவர். ஏழு வயதில் பைக் ஓட்ட ஆரம்பித்தார். மோட்டோ ஜிபி (இந்தியா) ஃபேர் ஸ்ட்ரீட் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தைக் கொண்டுள்ளது. இது ஷ்ரேயாஸை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுள்ளது. அண்மையில் பிரதமர் மோடி பாராட்டியிருந்தார்.

MUST READ