Homeசெய்திகள்தமிழ்நாடு"வினாடிக்கு 12,500 கனஅடி தண்ணீர் திறக்க வலியுறுத்துவோம்"- அமைச்சர் துரைமுருகன் பேட்டி!

“வினாடிக்கு 12,500 கனஅடி தண்ணீர் திறக்க வலியுறுத்துவோம்”- அமைச்சர் துரைமுருகன் பேட்டி!

-

 

"வினாடிக்கு 12,500 கனஅடி தண்ணீர் திறக்க வலியுறுத்துவோம்"- அமைச்சர் துரைமுருகன் பேட்டி!
Video Crop Image

காவிரியில் ஆற்றில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்புத் தெரிவித்து, கர்நாடகா மாநிலத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “கர்நாடகாவில் இருந்து வினாடிக்கு 12,500 கனஅடி தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் வலியுறுத்துவோம்.

மிலாது நபியையொட்டி, 3,000 கிலோ மட்டன் பிரியாணி தயாரிப்பு!

தமிழகத்திற்கு போதுமான அளவிற்கு தண்ணீர் வந்துக் கொண்டிருப்பதாகக் கூற முடியாது. ஆற்றின் கடைமடை பகுதிக்கே முன்னுரிமைத் தர வேண்டும் என்ற விதியை கர்நாடகா பின்பற்ற மறுக்கிறது. காவிரி நீர் திறப்பு தொடர்பான உத்தரவுகள் எதையும் கர்நாடகா பின்பற்றுவதில்லை. கர்நாடக மாநில அணைகளில் போதுமான அளவுக்கு தண்ணீர் இருந்தும், அதை திறக்க மறுக்கிறார்கள்.

வாச்சாத்தி கொடூரம்- குற்றவாளிகளின் மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி!

ஒரு மாநிலம் இன்னொரு மாநிலத்துடன் நட்புறவுடன் நடந்துக் கொள்வது அவசியம். நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற எண்ணம் இருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ