![கனமழை காரணமாக, நான்கு மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை!](https://www.apcnewstamil.com/wp-content/uploads/2023/06/heavy-rain-1.jpg)
சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று (டிச.03) பகல் 01.00 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நான்கு மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை- முன்னணி நிலவரம்!
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய மாவட்டங்களில் 13 மாவட்டங்களில் இன்று (டிச.03) பகல் 01.00 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் ஆட்சியமைக்கிறது பா.ஜ.க.?
தமிழகத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு பகுதியில் 15 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. ஊத்துக்கோட்டையில் 13 செ.மீ., தென்காசி 11 செ.மீ., ஆலந்தூர், பொன்னேரியில் 10 செ.மீ., திருத்தணி, ஆவடியில் 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.