spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபிளஸ் 2- இயற்பியல், பொருளியல் பாட தேர்வுக்கு 47,000 மாணவர்கள் ஆப்சென்ட்

பிளஸ் 2- இயற்பியல், பொருளியல் பாட தேர்வுக்கு 47,000 மாணவர்கள் ஆப்சென்ட்

-

- Advertisement -

பிளஸ் 2- இயற்பியல், பொருளியல் பாட தேர்வுக்கு 47,000 மாணவர்கள் ஆப்சென்ட்

நேற்று நடந்த பிளஸ் 2 தேர்வில் 47 ஆயிரம் மாணவர்கள் ஆப்சென்ட் ஆனதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

plus two exam

2022-23 ஆம் கல்வி ஆண்டுக்கான பிளஸ் டூ பொதுத்தேர்வு மார்ச் 13 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் தமிழ்நாட்டில் 4,03,156 மாணவர்களும் , 4,33,436 மாணவிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 8,36,593 பேர் தேர்வு எழுதுகின்றனர். அதே போன்று புதுச்சேரியில் இருந்து இந்த ஆண்டு பனிரெண்டாம் வகுப்பில் 6,982 மாணவர்களும் 7,728 மாணவிகளும் என மொத்தம் 14,710 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

we-r-hiring

அதில் தனித் தேர்வர்களாக 23 ஆயிரத்து 747 பேரும் என மொத்தம் 8 லட்சத்து 75 ஆயிரத்து 50 பேர் தேர்வு எழுத தகுதி பெற்றிருந்தனர். இந்த தேர்வுக்காக 3 ஆயிரத்து 185 பள்ளிகள் தேர்வு மையங்களாகவும், தனித் தேர்வர்களுக்காக 131 தேர்வு மையமும் மற்றும் சிறை கைதிகளுக்கான தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

முதலில் நடந்த தமிழ் தேர்வை சுமார் 50,000 மாணவர்கள் எழுதவில்லை. ஆங்கில தேர்வுக்கு 49 ஆயிரம் மாணவர்கள் ஆப்சென்ட் ஆனதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தது. இந்நிலையில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று நடந்த பாடத் தேர்வுகளில் 47 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கவில்லை என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மொழிப்பாட தேர்வுகளைத் தொடர்ந்து முக்கிய பாடத் தேர்வுகளுக்கும் மாணவர்கள் வராதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இயற்பியல், பொருளியல் உள்ளிட்ட முக்கிய பாடத் தேர்வுகள் நடைபெற்றது குறிப்பிடதக்கது.

MUST READ