spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமாநில சுயாட்சி நாயகருக்கு மகத்தான பாராட்டு… முதல்வருக்கு பாராட்டு விழா….

மாநில சுயாட்சி நாயகருக்கு மகத்தான பாராட்டு… முதல்வருக்கு பாராட்டு விழா….

-

- Advertisement -

ஆளுநர் தொடர்பான வழக்கில் மாநில சுயாட்சியை நிலைநாட்டும் வகையில் தீர்ப்பினை பெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு “மாநில சுயாட்சி நாயகருக்கு மகத்தான பாராட்டு”  எனும்  தலைப்பில்  பாராட்டு விழா நடைபெறுகிறது.மாநில சுயாட்சி நாயகருக்கு மகத்தான பாராட்டு… முதல்வருக்கு பாராட்டு விழா….“மாநில சுயாட்சி நாயகருக்கு மகத்தான பாராட்டு” எனும் தலைப்பில் பாராட்டு விழா நடைபெறுகிறது. ஆளுநர் தொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கில் மாநில முதலமைச்சர்களுக்கு ஆதரவாக தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது. சட்ட முன்வடிவுகள் அனுப்பப்பட்ட ஒரே மாதத்தில் ஆளுநர்கள் ஒப்புதலளிப்பது குறித்து முடிவு செய்ய வேண்டும். சட்டமுன்வடிவுகளை குடியரசுத் தலைவருக்கு  அனுப்ப ஆளுநர்களுக்கு 3 மாதம் மட்டுமே அவகாசம் வழங்கப்படும். சட்டமன்றத்தில் இரண்டாவது முறையாக நிறைவேற்றி அனுப்பிய சட்டமுன்வடிவுகளுக்கு ஆளுநர் ஒப்புதலளிப்பது கட்டாயம்.  உச்ச நீதிமன்ற தீர்ப்பு மூலம் துணை வேந்தர்களை முதலமைச்சர்களே நியமிக்க அதிகாரம் உண்டு என உச்சநீதிமன்றம் கூறியது.

மேலும், பாராட்டு விழாவில் பங்கேற்க வரும் முதலமைச்சருக்கு பிரமாண்ட வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வாழை மரத் தோரணங்கள், வண்ணக் கொடிகளுடன், முதலமைச்சர் வரும் வழியில் ஆங்காங்கு மேடைகள் அமைக்கப்பட்டு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

we-r-hiring

‘வேந்தர்களின் வேந்தரே ‘, ‘வேந்தர்களின் முதல்வரே’  என்ற வாசகங்களுடன் முதலமைச்சரை வரவேற்று சுவரொட்டியும் ஒட்டப்பட்டிருந்தன. முதலமைச்சருக்கான பாராட்டு விழாவில் கல்வியாளர்கள், மாணவர்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனா். நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அனைவருக்கும் முதலமைச்சரின் சுயசரிதையான உங்களில் ஒருவன் நூல் வழங்கப்படுகிறது.

பாஜக அரசின் ஊழல்களை அம்பலப்படுத்துவதால் நிருபர்களுக்கு நெருக்கடி – முதல்வர் மு.க.ஸ்டாலின்

MUST READ