ஆண்கள் மட்டுமே வழிபடும் ஆடித் திருவிழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.
துருவ் விக்ரம், மாரி செல்வராஜ் கூட்டணியின் புதிய படம்…..ஷூட்டிங் எப்போது?
மதுரை மாவட்டம், மங்களாம்பட்டியில் ஆண்டுதோறும் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் ஆடித் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டு 100- க்கும் மேற்பட்ட சேவல்கள் பக்தர்களால் கோயிலுக்கு காணிக்கையாக செலுத்தப்பட்டது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு பெண் வேடத்தில் நடிக்கும் கமல்….. எந்த படத்தில் தெரியுமா?
பிறகு, அவற்றைப் பலிக்கொடுத்து, சமைத்து மதுரை வீரன்சுவாமிக்கு ஆண்கள் படையலிட்டனர். பின்னர், ஆண்கள் அனைவருக்கும் அசைவ உணவுகள் பரிமாறப்பட்டது. பெண்களுக்கு இந்த விழாவில் பங்கேற்க அனுமதி இல்லை எனவும், சமைக்கப்பட்ட இறைச்சி பெண்களுக்கு வழங்கப்படுவதில்லை எனவும் கூறப்படுகிறது. இவ்வாறு வழிபடுவதால் மழைப் பெய்து விவசாயம் செழிக்கும் என விழாவில் பங்கேற்ற ஆண்கள் தெரிவித்துள்ளனர்.