spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுநாளை முதல் அரசுப் பள்ளிகளில் 2025 -26 ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடக்கம்

நாளை முதல் அரசுப் பள்ளிகளில் 2025 -26 ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடக்கம்

-

- Advertisement -

அரசுப் பள்ளிகளில் 2025-26ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை நாளை முதல் தொடங்குகிறது. கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் சேர விழிப்புணர்வு ஏற்படுத்த அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.நாளை முதல் அரசுப் பள்ளிகளில் 2025 -26 ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடக்கம்

2025-26ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை அரசுப் பள்ளிகளில் நாளை முதல் தொடங்குகிறது. அரசு, அங்கன்வாடி மையங்களில் முன்பருவக் கல்வி முடித்த அனைத்து குழந்தைகளையும் அரசுப் பள்ளிகளில் சேர்க்க உறுதி செய்ய அதிகாரிகளை உத்தரவிட்டுள்ளது.

we-r-hiring

கடந்த ஆண்டில், மாணவர் சேர்க்கை மார்ச் மாதத்திலேயே தொடங்கியதால், கோடை விடுமுறைக்கு முன்பே 60,000 மாணவர்கள் அரசு தொடக்கப்பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர். இதே மாதிரி, இந்த ஆண்டும் மாணவர் சேர்க்கையை முன்கூட்டியே தொடங்கி, அதிக எண்ணிக்கையில் மாணவர்களை சேர்ப்பதை அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் சேர அதிக விழிப்புணர்வு ஏற்படுத்தி, பெற்றோர்களைச் செயல்பட தூண்ட அரசு மேலும் பல திட்டங்களை செயல்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உயர்நீதிமன்றத்தில் குறிப்பிட்ட சாதியினரே நீதிபதிகளாக நியமனம்: போராட்டத்தை அறிவித்த ஆர்.எஸ்.பாரதி

MUST READ