spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஅ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி முறிவு- தலைவர்கள் கருத்து!

அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி முறிவு- தலைவர்கள் கருத்து!

-

- Advertisement -

 

அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி முறிவு- தலைவர்கள் கருத்து!
Photo: ADMK

பா.ஜ.க. உடனான கூட்டணியில் இருந்தும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தும் இன்று முதல் விலகிக் கொள்வதாக அ.தி.மு.க. தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

we-r-hiring

முறிந்தது அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி!

அ.தி.மு.க. தலைமையின் அறிவிப்பு குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் கூறிய கருத்தைப் பார்ப்போம்!

பா.ஜ.க.வின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறுகையில், “கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகியதில் எங்களுக்கு எவ்வித நஷ்டமும் கிடையாது” எனத் தெரிவித்தார்.

பா.ஜ.க.வின் மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் கூறுகையில், “அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி முறிவு குறித்து தேசிய தலைமை கருத்து கூறும் வரைப் பொறுத்திருப்போம்” எனக் கூறினார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. கூறுகையில், “தேர்தல் வரும் போது கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுப்போம்” என்றார்.

பி.ஆர்.பாண்டியன் கைதுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

“கூட்டணி முறிவு விவகாரத்தில் அண்ணாமலை வெற்றி பெற்று விட்டார்” என்று ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கூறுகையில், “அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி முறிவை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது” என்றார்.

அ.தி.மு.க., பா.ஜ.க. பிரிந்துள்ளது மகிழ்ச்சி தருவதாக அரியலூரில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

MUST READ