
சென்னையில் நடந்த அ.தி.மு.க.வின் மாவட்டச் செயலாளர் கள் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கே.பி.முனுசாமி, “பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலையின் பேச்சு அ.தி.மு.க. தொண்டர்களிடையே கொந்தளிப்பை உருவாக்கி விட்டது. ஓராண்டாகத் திட்டமிட்டு உள்நோக்கத்தோடு அண்ணா, ஜெயலலிதா பற்றி பா.ஜ.க. விமர்சித்து வருகிறது.

அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!
எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி உருவாக்கப்படும். இன்று முதல் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகிக் கொள்கிறது. இது தொடர்பாக அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அ.தி.மு.க. பொன்விழா மாநாட்டை சிறுமைப்படுத்தியும் பா.ஜ.க. மாநில தலைமை பேசியுள்ளது.
இரண்டு கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகிக் கொள்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
ஆயிரம் கோடியை வசூல் செய்து சாதனை படைத்த ‘ஜவான்’ திரைப்படம்
இதையடுத்து, அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகம் முன்பு அக்கட்சியின் தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்துக் கொண்டாடி வருகின்றனர்.