spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதியாகத்தால் வளர்ந்த கட்சி பாஜக- அண்ணாமலை

தியாகத்தால் வளர்ந்த கட்சி பாஜக- அண்ணாமலை

-

- Advertisement -

தியாகத்தால் வளர்ந்த கட்சி பாஜக- அண்ணாமலை

திமுக கவுன்சிலர்கள் கட்டப்பஞ்சாயத்தை தங்கள் முழுநேர தொழிலாக கொண்டுள்ளார்களா என்று மக்கள் நினைக்கிறார்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

annamalai meeting

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அண்ணாமலை, “திமுக கவுன்சிலர்கள் கட்டப்பஞ்சாயத்து செய்வதை தங்களது முழு நேர தொழிலாக கொண்டுள்ளார்களா என்ற எண்ணம் மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. பொன்னேரி 17-வது வார்டு கவுன்சிலர் இளங்கோ, ஒரு குடும்ப பிரச்சனையில் தலையிட்டு வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார். அடி வாங்கியவர்கள் காவல்துறையில் புகார் அளித்தும் திமுக கவுன்சிலர்கள் இதில் ஈடுபட்டுள்ளதால், நடவடிக்கை காவல்துறையினர் மறுத்திருக்கின்றனர். காவல்துறையினரின் அலட்சியமும் திமுக கவுன்சிலர்களின் வன்முறை வெறியாட்டமும் இன்று கொலையில் முடிந்திருக்கிறது.

we-r-hiring

தங்கள் கட்சியினர், தமிழகத்தை உலகின் அதிகம் குற்றம் நடக்கும் லத்தீன் அமெரிக்க நாடுகள் போன்று மாற்றிக் கொண்டிருப்பதை இன்னும் எத்தனை நாள் கண்டும் காணாமல் மெளனமாக இருப்பீர்கள் மு.க.ஸ்டாலின். நமக்கு கட்சி அலுவலகம் ஒரு கோயில். கட்சிக்காக எத்தனையோ பேர் உயிர் தியாகம் செய்ததால் வளர்ந்த கட்சி பாஜக. இது தியாகத்தால் வளர்ந்த கட்சி” என தெரிவித்தார்.

MUST READ