தென்காசிகுற்றால அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடை மூன்றாவது நாளாக தொடர்கிறது.
குற்றாலத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அறிவியலுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதைத்தொடர்ந்து பாதுகாப்பு கருதி மெயின் அருவி, ஐந்தருவி பழைய குற்றால அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து அதிக அளவு தண்ணீர் விழுந்து கொண்டிருப்பதால் குளிக்க விதிக்கப்பட்ட தடை மூன்றாவது நாளாக இன்று நீடிக்கிறது. மெயின் அருவியில் நேற்று இரவு பெருவெள்ளம் ஏற்பட்டது. தற்போது வெள்ளப்பெருக்கு குறைந்து உள்ளது
எனினும் பாதுகாப்பு வளையத்தை தாண்டி தண்ணீர் விழுவதால் அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருப்பதால் குற்றாலம் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்திற்கு உள்ளாகினர் என தெரிவிக்கின்றனர்.