Homeசெய்திகள்தமிழ்நாடுபீர் அருந்திய நபருக்கு உடல்நலக்குறைவு!

பீர் அருந்திய நபருக்கு உடல்நலக்குறைவு!

-

 

பீர் அருந்திய நபருக்கு உடல்நலக்குறைவு!

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே புழு மற்றும் தூசி கிடந்த பீர் குடித்த நபர், மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கோலாகலமாக நடந்து முடிந்த ரோபோ சங்கர் மகள் இந்திரஜாவின் நிச்சயதார்த்தம்!

பன்னம்பாறையைச் சேர்ந்த சண்முகம் என்பவர் குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதலூர் பகுதிக்கு வந்துள்ளார். தொழிலாளியான இவர் நண்பருடன் சேர்ந்து மது அருந்த முடிவுச் செய்து முதலூரில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைக்கு சென்றுள்ளார்.

அங்கு இரண்டு பீர் பாட்டில்களை வாங்கிக் குடித்துள்ளார். அப்போது, அவருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டு, அங்கேயே அவர் மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

ரஜினி, லோகேஷ் கனகராஜ் கூட்டணியின் புதிய படத்தில் டி – ஏஜிங் தொழில்நுட்பம்!

இதற்கிடையே, சண்முகம் அருந்திய பீர் பாட்டில்களை ஆய்வுச் செய்த போது, அதில் புழு மற்றும் தூசி இருந்தது தெரிய வந்தது. இது குறித்து கூறிய சண்முகம், மாவட்ட நிர்வாகம் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

MUST READ