Homeசெய்திகள்தமிழ்நாடுபோகிப் பண்டிகை: புகை, பனிமூட்டம்- சென்னையில் விமான சேவை பாதிப்பு!

போகிப் பண்டிகை: புகை, பனிமூட்டம்- சென்னையில் விமான சேவை பாதிப்பு!

-

- Advertisement -

 

போகிப் பண்டிகை: புகை, பனிமூட்டம்- சென்னையில் விமான சேவை பாதிப்பு!

தமிழகம் முழுவதும் போகிப் பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. வீட்டில் உள்ள தேவையற்றப் பொருட்களை தெருக்களில் தீயிட்டுக் கொளுத்தி உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். தீயின் முன்பு அமர்ந்து சிறுவர்கள் மேளம், தாளம் முழங்க உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.

கமல் – பிக்பாஸ் மாயா குறித்த சர்ச்சை பேச்சு…. மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்ட புகழ், குரேஷி!

போகிப் பண்டிகையையொட்டி, மக்கள் பழைய பொருட்களை எரித்து வருவதால் சென்னையில் காற்றின் தரம் மோசமடைந்தது. மணலியில் காற்றின் தரக் குறியீடு 287 என்ற மோசமான நிலையில், பதிவாகியுள்ளது. பெருங்குடியில் 280, எண்ணூரில் 226, அரும்பாக்கத்தில் 207, ராயபுரத்தில் 195 என்ற அளவில் காற்றின் தரக் குறியீடு உள்ளது.

போகிப் பண்டிகை மற்றும் பனிமூட்டத்தால் சென்னைக்கு வரும் ரயில்களின் வருகை தாமதமாகியுள்ளது. சிக்னல் தெளிவாகத் தெரியாததால் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் ரயில்கள் ஒரு மணி நேரம் தாமதமாகியுள்ளது.

எதிரே வாகனங்கள் தெரியாத அளவுக்கு புகைமூட்டம் நிலவுவதால் முகப்பு விளக்கை எரியவிட்டபடி வாகனங்கள் செல்கின்றன. இதனிடையே, சென்னையில் கடும் புகைமூட்டம் நிலவி வரும் சூழலில் கோயம்பேட்டில் சரக்கு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மதுரவாயல் ஏரிக்கரை அருகே பூக்கள் ஏற்றி வந்த லாரி பள்ளத்தில் சிக்கிய விபத்தில் யாருக்கும் பாதிப்பில்லை.

வெற்றி நடை போடும் சிவகார்த்திகேயனின் அயலான்….. ஓடிடி உரிமத்தை கைப்பற்றிய நிறுவனம்?

பனிமூட்டம் மற்றும் புகை காரணமாக, சென்னை வர வேண்டிய விமானங்கள் திருப்பிவிடப்பட்டன. விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்கள் தாமதமாகியுள்ளன. லண்டன், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து சென்னைக்கு வந்த விமானங்கள், ஹைதராபாத்திற்கு திருப்பிவிடப்பட்டன.

MUST READ