spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"பா.ஜ.க. ஆட்சி படுத்தோல்வி அடைந்துவிட்டது"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

“பா.ஜ.க. ஆட்சி படுத்தோல்வி அடைந்துவிட்டது”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

-

- Advertisement -

 

'மத்திய அரசு நிதி பாகுபாடு'- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

we-r-hiring

பத்தாண்டு கால பா.ஜ.க. ஆட்சி படுதோல்வி அடைந்துவிட்டதை மக்கள் உணரத் தொடங்கிவிட்டனர் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“பாசிச கும்பலிடமிருந்து நாட்டைக் காக்க உறுதியேற்போம்”- தொல்.திருமாவளவன் எம்.பி. அறிக்கை!

இது குறித்து தி.மு.க.வின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “புகழ்பெற்ற LoknitiCSDS ஆய்வு அமைப்பு, 2024 மக்களவைத் தேர்தலில் முக்கியப் பிரச்சினைகள் எவை என மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளது.

அதில், 27% பேர் Unemployment தான் முக்கியப் பிரச்சினை என்றும், 23% பேர் விலைவாசி உயர்வு என்றும், 55% பேர் கடந்த 5 ஆண்டு பா.ஜ.க. ஆட்சியில் ஊழல் அதிகரித்துவிட்டதாகவும், ஏழை மக்களில் 76% பேர் விலைவாசி உயர்வே இத்தேர்தலில் முக்கியப் பிரச்சினை என்றும் கூறியுள்ளனர். இதில் இருந்தே இந்த பா.ஜ.க. ஆட்சியின் முடிவுக்கான Countdown ஆரம்பம் ஆகிவிட்டது.

“பாசிச கும்பலிடமிருந்து நாட்டைக் காக்க உறுதியேற்போம்”- தொல்.திருமாவளவன் எம்.பி. அறிக்கை!

அதிகரித்துவிட்ட ஊழல், கார்ப்பரேட்டுகளிடமே மீண்டும் மீண்டும் குவியும் செல்வம், தொடரும் பாகுபாடுகள் என மக்களின் அன்றாட வாழ்வாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில், பத்தாண்டுகால பா.ஜ.க. ஆட்சி படுதோல்வி அடைந்துவிட்டதை மக்கள் உணரத் தொடங்கி விட்டார்கள். சிலரைச் சில காலம் ஏமாற்றலாம்; எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது!”. இவ்வாறு முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ