
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த நீதிமன்றம் உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் என் பெயரை கேட்டால் பாஜக நடுங்குகிறது- ஆ.ராசா
தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரிய முனுசாமி என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுத்தாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் தான் அரசின் திட்டங்களை உரியவர்களைச் சென்றடையும் என்று வாதிட்டார்.
அமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கூச்சலிட்ட நபர்!
இதற்கு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, “தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த நீதிமன்றம் உத்தரவிட முடியாது. எந்த அடிப்படையில் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது. ஏற்கனவே மனு அளித்துள்ளதால் தமிழக அரசை அணுக மனுதாரருக்கு அறிவுரை வழங்கி, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.