Homeசெய்திகள்தமிழ்நாடுகாவிரி விவகாரத்தில் அடம்பிடிக்கும் கர்நாடகா!

காவிரி விவகாரத்தில் அடம்பிடிக்கும் கர்நாடகா!

-

 

DK Shivakumar press meet

உச்சநீதிமன்ற உத்தரவுப் படி, தமிழகத்திற்கு காவிரியில் இருந்து திறக்கப்பட வேண்டிய தண்ணீர் திறக்காமல் இருக்கும் கர்நாடகா அரசை தண்ணீர் திறந்துவிட மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டப்பேரவையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானம் ஒருமனதாகப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

‘இஸ்லாமிய கைதிகள் விடுதலை’- முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் காரசார வாதம்!

இந்த நிலையில், கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்த அம்மாநில துணை முதலமைச்சரும், நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமார், “மழையின்மை காரணமாக, கர்நாடகாவில் தண்ணீர் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டி, கர்நாடக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்படும். எங்களது விவசாயிகளின் நலனை நாங்கள் பாதுகாக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

MUST READ