Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னையில் ஆணவப் படுகொலை- 4 பேர் கைது!

சென்னையில் ஆணவப் படுகொலை- 4 பேர் கைது!

-

 

சென்னையில் ஆணவப் படுகொலை- 4 பேர் கைது!

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் ஜல்லடியான்பேட்டைப் பகுதியைச் சேர்ந்த ஷர்மி என்கிற பெண்ணை கடந்த சில வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் வீட்டிற்கு தெரியாமல் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

நாட்டில் வேலைக்கு செல்லும் பெண்களில் 42% பேர் தமிழகத்தில் உள்ளனர் – அமைச்சர் உதயநிதி பேச்சு

இந்த நிலையில், நேற்று (பிப்.24) இரவு பள்ளிக்கரணை பகுதியில் ‘ஜாலி வே’ பார் என்ற மதுபான விடுதிக்கு பிரவீன் வந்தபோது, அங்கு மறைந்திருந்த ஷர்மின் அண்ணன் தினேஷ் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து பிரவீனை அரிவாளால் கொடூரமாக வெட்டிவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

படுகாயமடைந்த பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

கிளாம்பாக்கம் செல்லும் பயணிகளுக்காக ரயில் சேவை நீட்டிப்பு!

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவுச் செய்த பள்ளிக்கரணை காவல்துறையினர், தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்த நிலையில், கொல்லப்பட்ட நபரின் மனைவியின் சகோதரர் தினேஷ் உள்ளிட்ட 4 பேரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர்.

MUST READ