நடப்பு கல்வியாண்டுக்கான 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளார் அமைச்சர் அன்பில் மகேஷ்.
தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்கி மார்ச் 25ம் தேதி முடிகிறது என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். கோவை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 2024 – 2025ம் கல்வியாண்டிற்கான 10, 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார். பள்ளிக்கல்வித்துறை, அரசு தேர்வுகள் இயக்கம் நடத்தும் 2024-2025 கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வை மொத்தம் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தேர்வு எழுதவுள்ளனர்.
12ம் வகுப்பு பொதுத்தேர்வு 2025 ஆண்டு மார்ச் மாதம் 3ம் தேதி தொடங்கி 25ம் தேதி நிறைவு பெறவுள்ளது.
11ம் வகுப்பு பொதுத்தேர்வு 2025 ஆண்டு மார்ச் மாதம் 05ம் தேதி தொடங்கி 27ம் தேதி நிறைவு பெறவுள்ளது.
10ம் வகுப்பு பொதுத்தேர்வு 2025 மார்ச் 28ம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 15ம் தேதி நிறைவு பெறவுள்ளது.
செய்முறை தேர்வு ( Practical Exam)
12ம் வகுப்பு செய்முறை தேர்வு 07 பிப்ரவரி 2025ல் தொடங்கி 14ம் தேதி முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
11ம் வகுப்பு செய்முறை தேர்வு 15 பிப்ரவரி 2025ல் தொடங்கி 21ம் தேதி முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
10ம் வகுப்பு செய்முறை தேர்வு 22 பிப்ரவரி 2025ல் தொடங்கி 28 பிப்ரவரி 2025ல் முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வு முடிவுகள்
பொதுத்தேர்வு முடிவுகளை பொறுத்தவரை 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 2025 ஆம் ஆண்டு மே 09ம் தேதி வெளியாகும் என்றும், 11 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு 2025 ஆம் ஆண்டு மே-19ம் தேதி வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.