spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதர்மபுரி அருகே தனியார் பேருந்து விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு

தர்மபுரி அருகே தனியார் பேருந்து விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு

-

- Advertisement -

'மத்திய அரசு நிதி பாகுபாடு'- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே தனியார் பேருந்து விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

we-r-hiring

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், ஜெர்த்தலாவ் கிராமம், பாரதியார் நகர் அருகில் நேற்று (15.07.2024) மாலை சுமார் 05.30 மணியளவில் இரண்டு தனியார் பேருந்துகள் எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் இரண்டு பேருந்துகளிலும் பயணம் செய்த 21 நபர்கள் பலத்த காயமடைந்ததோடு இவ்விபத்தில் மேலும் பலர் காயமடைந்தனர் செய்தியினைக் கேட்டு மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன். இந்த விபத்தில் காயமடைந்து தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்.

மேலும் இவ்விபத்தில் காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்வதோடு, பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும், இலேசான காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

MUST READ