Homeசெய்திகள்தமிழ்நாடுதிண்டுக்கல்லில் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம்!

திண்டுக்கல்லில் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம்!

-

நாடாளுமன்ற தேர்தலையொட்டி எஸ்டிபிஐ கட்சியின் வேட்பாளர் நெல்லை முபாரக்கை ஆதரித்து அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரையில், திமுக, அதிமுக, பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவி வருகிறது. அதிமுக சார்பில் அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முழுவதும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

19.04.2024 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலையொட்டி, மாண்புமிகு கழகப் பொது செயலாளர் ‘புரட்சித் தமிழர்’ திரு.
@EPSTamilNadu அவர்கள், நேற்று திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, திண்டுக்கல் மணிகூண்டில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில், திண்டுக்கல் தொகுதி SDPI கட்சி வேட்பாளர் திரு. நெல்லை முபாரக் அவர்களுக்கு ‘இட்டை இலை’ சின்னத்தில் வாக்களித்து, அவரை மகத்தான வெற்றி பெறச் செய்திடுமாறு தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

 

 

 

MUST READ