spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார் கனிமொழி!

தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார் கனிமொழி!

-

- Advertisement -

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கனிமொழி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

we-r-hiring

மக்களவை தேர்தல் அறிவிப்புகளை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் கடந்த 16 ஆம் தேதி வெளியிட்டார். அதன்படி மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மக்களவை தேர்தலில் 97 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 1,82 கோடி முதல்முறை வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். ஆண் வாக்காளர்கள் 49.7 பேரும், பெண் வாக்காளர்கள் 47.01 கோடி பேரும் உள்ளனர். 88.4 லட்சம் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் உள்ளனர். மூன்றாம் பாலினத்தவர்கள் 48,044 பேர் உள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரையில், திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில், தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கனிமொழி வேட்புமனு தாக்கல் செய்தார். அதற்கான படிவத்தை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வழங்கினார். அவருடன் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் மற்றும் திமுக நிர்வாகிகள் சிலர் உடனிருந்தனர். கடந்த 2019ம் ஆண்டு நடைபேற்ற மக்களவை தேர்தலில் கனிமொழி தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடதக்கது.

MUST READ