spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஇல்லாத ஒன்றைக் கேட்டு எடப்பாடி பழனிசாமி அரசியல் ஆதாயம் தேடுகிறார்...  அமைச்சர் கோவி.செழியன் குற்றச்சாட்டு

இல்லாத ஒன்றைக் கேட்டு எடப்பாடி பழனிசாமி அரசியல் ஆதாயம் தேடுகிறார்…  அமைச்சர் கோவி.செழியன் குற்றச்சாட்டு

-

- Advertisement -

யார் அந்த சார்? என்று இல்லாத ஒன்றைக் கேட்டு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அரசியல் ஆதாயம் தேடுகிறார் என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் குற்றம்சாட்டியுள்ளார்.

govi chezhiyan
govi chezhiyan

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு பதில் அளிக்கும் விதமாக உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:- முதலமைச்சராக இருந்தபோது 13 அப்பாவி பொதுமக்களைக் காக்கைக் குருவிகளைச் சுடுவதைப்போல சுட்டுக் கொன்றதையே டி.வி.யைப் பார்த்து தெரிந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி இன்னும் திருந்தாமல் பத்திரிகைகளில் வந்த கிசுகிசுவை அடிப்படையாக வைத்து போராட்டம் என்ற பெயரில் மக்களை வாட்டி வதைக்கிறார்.

we-r-hiring

Edappadi

திராவிட மாடல் ஆட்சியில் பெண்கள் உயர்கல்வி பயில்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதைச் சிதைக்கும் வகையில் யார் அந்த சார்? என்று இல்லாத ஒன்றைக் கேட்டு அரசியல் ஆதாயம் தேடுகிறார். இன்று கூட திராவிட மாடல் அரசின் முன்னோடி திட்டமான புதுமைப்பெண் திட்டம் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்று முடித்து உயர்கல்வி பயில்வோருக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

பாலியல் புகார்களில் பெண்கள் காவல்துறையினரிடம் புகார் அளிக்கவே அஞ்சி நடுங்கிய நிலை திராவிட மாடல் ஆட்சியில் மாற்றப்பட்டு பாதிக்கப்பட்ட பெண்கள் துணிச்சலாக புகார் தருகிறார்கள். அவர்களை மீண்டும் அச்சுறுத்தும் விதமாகத்தான் எடப்பாடி பழனிசாமியின் அறிக்கை அரசியலையும் போராட்ட நாடகத்தையும் மக்கள் பார்க்கிறார்கள், இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

MUST READ