Homeசெய்திகள்தமிழ்நாடு‘மிக்ஜம்’ புயல்: அவசர உதவி எண்களை அறிவித்தது புதுச்சேரி அரசு!

‘மிக்ஜம்’ புயல்: அவசர உதவி எண்களை அறிவித்தது புதுச்சேரி அரசு!

-

 

மிக்ஜம் புயல் முன்னெச்சரிக்கையாக அவசர உதவி எண்களை புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள மிக்ஜம் புயல் நாளை மறுநாள் கரையைக் கடக்க உள்ள நிலையில், இன்றும், நாளையும் (டிச. 03, 04) வட கடலோர தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மிக கனமழை (20.4 செ.மீக்கு மேல்) பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மழையை எதிர்கொள்ள மாநில அரசுகள் தயார் நிலையில் உள்ள நிலையில் அவரச உதவி எண்களை புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “வங்கக்கடலில் உருவாகியுள்ள மிச்சாங் புயல் சின்னம் காரணமாக புதுச்சேரியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. புதுச்சேரியில் புயல் மற்றும் கனமழையை சூறாவளியை எதிர்கொள்வதற்கு அனைத்து துறைகளும் தயார் நிலையில் உள்ளன. மக்கள் அவசர உதவிக்கு மாநில அவசரகால மையத்தில் 24 மணிநேரமும் இயங்கும் 1070 மற்றும் 1077 என்கிற கட்டணமில்ல தொலைபேசி எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.

‘மிக்ஜாம்’ புயல்: அவசர உதவி எண்களை அறிவித்தது புதுச்சேரி அரசு!

இது தவிர கீழ்காணும் துறைகளில் கட்டணமில்லா தொலைபேசியுடன் இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன.

மின்துறை – 1912
சுகாதாரத்துறை – 108, 104
காவல்துறை – 100, 112, 1931, 1073 1091
தீயணைப்புத்துறை – 101
கடலோர காவல் படை – 1554

பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்கள் அதிகாரிகள் கேட்டுக்கொள்ளாதவரை பாதுகாப்பு முகாம்களைவிட்டு வெளியே வரவேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறேன். மீனவர்கள் கடலுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும், பொதுமக்கள் கடற்கரை, பூங்கா போன்ற பொது இடங்களுக்குச் செல்வதையும், தவிர்க்க வேண்டும்.

அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளைச் சார்ந்தவர்கள் அவரவர் பகுதிகளில் உள்ள மக்களுக்கு தேவையான அத்தியாவசிய தேவைகளுக்கு உதவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அரசு மேற்கொள்ளும் பேரிடர் உதவி தொடர்பான நடவடிக்கைகளுக்கு மக்கள் தங்களது ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்று இத்தருணத்தில்
கேட்டுக்கொள்கின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ