spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஎல்லாமே தயார்; இனி மழைதான் வரவேண்டும் - அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

எல்லாமே தயார்; இனி மழைதான் வரவேண்டும் – அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

-

- Advertisement -

வெள்ள மீட்புப் பணிக்காக தமிழக அரசோடு சென்னை மாநகராட்சி பணியாளர்கள் 22 ஆயிரம் பேரும் தன்னார்வலர்கள் 18,500 பேரும் 103 படகுகளும் தயாராக இருக்கும் நிலையில், இனி மழை தான் வர வேண்டும் என அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்..எல்லாமே தயார்; இனி மழைதான் வரவேண்டும் - அமைச்சர் கே.என்.நேரு பேட்டிதமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் சென்னையின் பல்வேறு இடங்களில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்தார். அந்த வகையில் ஓட்டேரி நல்லா கால்வாய், அம்பேத்கர் பாலம், பேசின் பிரிட்ஜ், விருகம்பாக்கம் கால்வாய் உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் கால்வாய் சீரமைப்புப் பணிகளை அவர் ஆய்வு நடத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, எவ்வளவு பெரிய மழை வந்தாலும் அதை சமாளிக்கக் கூடிய அளவிற்கு மாநகராட்சி அனைத்து நிலைகளிலும் தயாராக உள்ளனா்.

மழை நீர் தேக்கம் சென்னையில் எங்கும் இல்லை என்றும் சிறிய அளவில் தேங்கிய நீரும் மழையில் விழுந்த ஒரு மரமும் அகற்றப்பட்டு விட்டதாகவும் அவர் தெரிவித்தார். சென்னை மாநகராட்சியில் 320 இடங்களில் நிவாரண மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கூறிய கே.என்.நேரு, நிவாரண மையங்களில் உணவு, சுகாதார வசதிகள், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்றார்.மழை நேரங்களில் உணவு வழங்க சென்னையில் 120 சமையல் கூடங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

we-r-hiring

தாழ்வான பகுதிகளில் இருக்கக்கூடிய பொதுமக்களை மீட்டு நிவாரண மையங்களில் தங்க வைக்க 103 படகுகள் தயார் நிலையில் உள்ளன என்றும் இதில் 36 படகுகள் சென்னை மாநகராட்சி சார்பில் வாங்கப்பட்டுள்ளதையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். கணேசபுரம் சுரங்கப்பாதையை தவிர்த்து சென்னையில் இருக்கக்கூடிய அத்தனை சுரங்க பாதைகளிலும் போக்குவரத்து இயல்பாக இருக்கிறது என அவர் தெரிவித்தார்.

மருத்துவர் பாலாஜியின் உடல்நிலை குறித்து அப்டேட் கொடுத்த கிண்டி மருத்துவமனை இயக்குநர்!

நீர்அகற்ற 100 HP மோட்டார்கள் நூற்று முப்பத்து நான்கும், மோட்டார் பொருத்தப்பட்ட டிராக்டர்கள் நானூற்று இருபத்தாறுமும் தயார் நிலையில் உள்ளன என்று அமைச்சர் நேரு கூறினார். மழை காலத்தை முன்னிட்டு சென்னையில் 2193 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 1,19,828 பேர் பயனடைந்துள்ளதையும் அவர் விளக்கினார். சென்னை மாநகராட்சி பணியாளர்கள், அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் 22000 பேரும் 18,500 தன்னார்வலர்களும் மழையில் பணியாற்ற பதிவு செய்துள்ளதை சுட்டிக்காட்டிய அமைச்சர் கே.என்.நேரு,

“நாங்கள் தயார் நிலையில் இருக்கிறோம் இனி மழை தான் வரவேண்டும் என வேடிக்கையாக குறிப்பிட்டார். முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்ற அதிகாரிகள் என அனைவரும் மக்கள் பாதிக்க கூடாது என்பதற்காக கண்ணும் கருத்துமாக உள்ளனர் என அவர் தெரிவித்தார். மழை காலங்களில் உற்பத்தியாகும் கொசுக்களை ஒழிக்க, சென்னை முழுக்க கொசு மருந்து அடிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கே.என்.நேரு கூறினார்….

MUST READ