Homeசெய்திகள்தமிழ்நாடுபாஜக மோடி அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற விவசாயிகள் – கைது

பாஜக மோடி அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற விவசாயிகள் – கைது

-

- Advertisement -

விவசாயிகளுக்கு எதிராக செயல்படும் ஒன்றிய பாஜக மோடி அரசை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கினைப்பு குழு பொதுச்செயலாளர் வி.ஆர்.துரைசாமி  தலைமையில் தாம்பரத்தில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 50 விவசாயிகள் கைது, தடுக்க முயன்ற போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பாஜக மோடி அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற விவசாயிகள் – கைது

 

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு சார்பில் ஒன்றிய மோடி அரசின், விவசாயிகளுக்கு எதிரான செயல்பாட்டை கண்டித்து பொதுச் செயலாளர் வி.கே.துரைசாமி தலைமையில் தாம்பரம் ரெயில் நிலையத்தில்  50 க்கும் மேற்பட்ட விவசாயிகள் ரெயில் மறியலில் ஈடு பட முயன்றனர், அப்போது போலீசார் தடுத்ததால் கடும் தள்ளு முள்ளு ஏற்பட்டது, அனைவரையும் கைது செய்து போலீசார் அங்குள்ள திருமணமண்டபத்தில் சிறைவைத்தனர்.

அப்போது செய்தியளர்களிடம் பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கினைப்பு குழு பொதுச்செயலாளர் வி.ஆர்.துரைசாமி:- ஆட்சி அமையும் முன்னர் விவசாயிகளுக்கு ஆதரவாக பேசிய பாஜக வினர் ஆட்சி அமைந்தவுடன் எதிராகவும் அடக்குமுறையை கையாள்கிறது, விளை பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணய சட்டம் கொண்டுவரவேண்டும், வேளாண்மைகான இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் மின்சார ஒழுங்குமுறை சட்டத்தை திரும்ப பெற வேண்டும்.

விவசாயிகள் பெற்ற கடன் முழுவதையும் தள்ளுபடி செய்திட வேண்டும். எம்.எஸ்.பி கேட்டு சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜெக்ஜித் சிங் டல்லேவால் அழைத்து பேச்சு வார்த்தை நடத்திட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளாா்.

அரசமைப்பு சட்டத்திற்கு ஆர்.எஸ்.எஸ் – இந்துமகா சபா என்ன பங்களிப்பு செய்தன?… திமுக எம்.பி. ஆ.ராசா சரமாரி கேள்வி!

 

MUST READ