Homeசெய்திகள்தமிழ்நாடுதஞ்சை இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை - மேலும் இருவர் கைது!

தஞ்சை இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை – மேலும் இருவர் கைது!

-

- Advertisement -

தஞ்சையில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் தலைமறைவாக இருந்த மேலும் 2 பேரை போலிசார் கைது செய்தனர்.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண், கடந்த 12ஆம் நண்பர் உள்ளிட்ட 4 நபர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக 17 வயது சிறுவன் உள்ளிட்ட 4 பேரை ஒரத்தநாடு காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், இந்த விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்ய தாமதம் செய்த பாப்பாநாடு காவல் நிலைய உதவி ஆய்வாளரை சஸ்பெண்ட் செய்து, டிஐஜி உத்தரவிட்டார்.

இநத நிலையில், இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய மேலும் 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த 17 வயது சிறுவன் மற்றும் வேல்முருகன் ஆகியோரை போலிசார் கைது செய்துள்ளனர். இதனால் இந்த வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

 

MUST READ