Homeசெய்திகள்தமிழ்நாடு"கேங்மேன் பணி கோரி போராட்டம்- வழக்கை வாபஸ் பெறுக"- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

“கேங்மேன் பணி கோரி போராட்டம்- வழக்கை வாபஸ் பெறுக”- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

-

 

நாங்கள் யார் என்பதை மதுரை மாநாட்டில் நிருபிப்போம் - அதிமுக தொண்டர்கள் உற்சாகம்..
File Photo

கேங்மேன் பணி வழங்கக் கோரி போராடிய இளைஞர்கள் மீதான வழக்கைத் திரும்பப் பெற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

“புத்தகங்களைப் படிக்க குழந்தைகளைத் தூண்ட வேண்டும்”- பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை!

அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சியின் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கேங்மேன் பணி வழங்கக் கோரி அரசின் கவனத்தை ஈர்க்கப் போராட்டிய தமிழக இளைஞர்கள் மேல் பதிந்த வழக்குகளை திரும்பப் பெறவும், அவர்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்கிடவும் விடியா தி.மு.க. அரசின் முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்.

ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு, 2017- ஆம் ஆண்டு எனது தலைமையிலான ஜெயலலிதாவின் அரசு பதவியேற்ற நாளில் இருந்து, ஜெயலலிதா ஆட்சியின் இறுதிநாள் வரை ஆர்ப்பாட்டம், போராட்டம் என பல்லாயிரக்கணக்கான போராட்டங்கள் நடைபெற்றன. இப்போதுள்ள அதே காவல்துறைதான் எங்களது ஆட்சியிலும் இருந்தது. ஆனால், ஜெயலலிதாவின் அரசு அனைத்துப் போராட்டங்களையும் சட்டப்படி கையாண்டது.

நெல்லை- சென்னை வந்தே பாரத் ரயில் சேவையைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி!

யார் மீதும் பழிவாங்கும் நோக்கத்தில், குறிப்பாக போராடிய இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கும் வகையில் எந்தவிதமான நடவடிக்கையிலும் எனது தலைமையிலான ஜெயலலிதாவின் அரசு ஈடுபடவில்லை.

தி.மு.க. அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் முதலமைச்சரின் தொகுதியிலேயே, கேங்மேன் பணிகளுக்குத் தேர்வு செய்யப்பட்ட சுமார் 800 விடுபட்ட கேங்மேன்கள் போராட்டம் நடத்திவிட்டார்கள் என்ற எண்ணத்தில், அவர்களுக்கு சம்மன் வழங்க முயற்சிக்கும் தி.மு.க. அரசின் காவல்துறை, அம்முயற்சியை கைவிட வேண்டும் என்றும், தங்களது எதிர்காலத்திற்காகப் போராடும் இளைஞர்களுடைய வாழ்வினை பலியாக்கும் எந்தவித முயற்சியிலும் ஈடுபட வேண்டாம் என்று காவல் துறையை வலியுறுத்துகிறேன்.

நெல்லை- சென்னை வந்தே பாரத் ரயில் சேவையைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி!

மேலும், கேங்மேன் பணிகளுக்குத் தேர்வான 5,237 இளைஞர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு உடனடியாக கேங்மேன் பணி நியமன ஆணைகளை வழங்க, விடியா தி.மு.க. அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்”. இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

MUST READ