Homeசெய்திகள்தமிழ்நாடுதூத்துக்குடியில் ரூ.16 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலை

தூத்துக்குடியில் ரூ.16 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலை

-

தூத்துக்குடியில் ரூ.16 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலை

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் உலகின் முன்னணி மின் வாகனத் தயாரிப்பு நிறுவனமான, வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின்பாஸ்ட் என்ற நிறுவனம், தூத்துக்குடியில் ரூ.16 ஆயிரம் கோடியில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க ஒப்பந்தம் செய்தது.

இதற்காக, தூத்துக்குடி சில்லாநத்தம் சிப்காட் பகுதியில் 408 ஏக்கர் நிலம் ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, வின்பாஸ்ட் தொழிற்சாலை அமைக்கும் பணிகளுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த பிப்ரவரி மாதம் அடிக்கல் நாட்டினார்.

இந்தநிலையில் கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி வின்பாஸ்ட் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.

இந்த விண்ணப்பத்தில்  படி, முதல் கட்டமாக 114 ஏக்கரில் தொழிற்சாலை அமைக்கப்படவுள்ளது.

ரூ.16 ஆயிரம் கோடியில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க ஒப்பந்தம் செய்தது.

முதல் கட்டமாக ஆண்டுக்கு 50 ஆயிரம் வாகனங்களை உற்பத்தி செய்யும் வகையில் இரண்டு பணிமனைகள், 2 குடோன்கள், கார் பரிசோதனை செய்யும் இடம் உள்ளிட்டவைகள் அமைய இருக்கிறது.

1119.67 கோடி செலவில் அமைய உள்ள தொழிற்சாலை கட்டுமான பணிகள் சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்த உடன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ