நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக பதவி வகித்து வந்த கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங் மர்ம மரணம் குறித்து சிபிசிஐடி ஐஜி அன்பு, எடிஜிபி வெங்கட்ராமன், எஸ்பி முத்தரசி மற்றும் ஆய்வாளர் உலக ராணி தலைமையில் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கரை சுத்துபுதூரை சேர்ந்தவர் கே.பி.கே ஜெயக்குமார் தனசிங் (60). இவர் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக பதவி வகித்து வந்தார்.
கடந்த மே மாதம் 4 ஆம் தேதி அவரது வீட்டின் தோட்டத்தில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் உடல் கருகி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் இறப்பதற்கு முன் எழுதிய கடிதங்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான 11 தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
தொடர்ந்து ஜெயக்குமாரின் உறவினர்கள் நண்பர்கள் தெரிந்த நபர்கள் கடிதத்தில் குறிப்பிட்ட நபர்களிடம் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
ஜெயக்குமார் எப்படி இறந்தார் என உறுதியான தகவல் தெரியாததால் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக டிஜிபி மாற்றி உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து சிபிசிஐடி ஆய்வாளர் உலக ராணி தலைமையிலான வள்ளியூர் டிஎஸ்பி யோகேஷ் குமார் ஆகியோர் கொண்ட 15 பேர் கொண்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதனைத் தொடர்ந்து சுமார் 32 பேருக்கு சிபி சிஐடி போலிசார் சமன் அனுப்பி வைத்து நெல்லை சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றது. அதே போல் அவருடைய மனைவி மற்றும் மகன்களை சிபிசிடி அலுவலகத்திற்கு அழைத்து விசாரணை செய்யப்பட்டது.
ஜெயக்குமாரின் மர்ம மரண வழக்கை துரிதப்படுத்தும் வகையில் கரை சுற்றுப்புதூரில் ஜெயகுமார் உடல் கிடந்த தோட்டத்தில் திருநெல்வேலி மாவட்ட, மாநகர வெடிகுண்டு தடுப்பு காவல் துறையினருடன் இணைந்து சுமார் 30க்கும் மேற்பட்ட சிபிசிஐடி போலீசார் ஆய்வு செய்தனர்.
மாயமான காங்கிரஸ் நிர்வாகி சடலமாக மீட்பு! (apcnewstamil.com)
நேற்று சைபர் கிரைம் போலீசார் டம் டவர் கருவி மூலம் அவர் வீட்டு முன்பு வைத்து ஜெயக்குமார் காணாமல் அன்று அவரது வீட்டின் அருகில் உள்ள பகுதிகளில் உள்ள செல்போன் எண்களை ஆய்வு செய்தனர். இந்த நிலையில் இன்று
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக பதவி வகித்து வந்த கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங் மர்ம மரணம் குறித்து சிபிசிஐடி ஐஜி அன்பு, எடிஜிபி வெங்கட்ராமன், எஸ்பி முத்தரசி மற்றும் ஆய்வாளர் உலக ராணி தலைமையில் அவரது வீடு, அலுவலகம், தோட்டம் ஆகிய இடங்களில் ஆய்வு செய்து வருகின்றனர்.