Homeசெய்திகள்தமிழ்நாடுபெட்ரோல் குண்டு கலாச்சாரத்தில் சிறார்களும் ஈடுபட்டுள்ளனர் என்பது வேதனையளிக்கிறது - ஜெயக்குமார்

பெட்ரோல் குண்டு கலாச்சாரத்தில் சிறார்களும் ஈடுபட்டுள்ளனர் என்பது வேதனையளிக்கிறது – ஜெயக்குமார்

-

- Advertisement -

பெட்ரோல் குண்டு கலாச்சாரத்தில் சிறார்களும் ஈடுபட்டுள்ளனர் என்பது வேதனையளிக்கிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை பழையவண்ணாரப்பேட்டையில் காலனி விற்பனை செய்யும் கடை ஒன்றில் நேற்று முன் தினம் பூட்டியிருந்த கடை மீது இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல் ஒன்று பெட்ரோல் குண்டு வீசி விட்டு தப்பி சென்றுள்ளது. இதனைத்தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் குற்றாவாளிகள் நான்கு பேரை கைது செய்தனர்.

jayakumar

இந்நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “செய்யும் தொழிலே தெய்வம் என எண்ணி உழைக்கும் கடையின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு அதிர்ச்சியளிக்கிறது. எனது சொந்த தொகுதியான இராயபுரத்திற்கு உட்பட்ட வண்ணாரபேட்டையில் சாகுல் ஹமீது என்பவரது கடையின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. இது எந்த அளவிற்கு சட்ட ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்பதை எடுத்துக் காட்டுகிறது.நம் தொகுதியில் 25 ஆண்டுகளாக இல்லாத பெட்ரோல் குண்டு கலாச்சாரம் தற்போது வந்தது எப்படி? இச்சம்பவத்தில் சிறார்களும் ஈடுபட்டுள்ளனர் என்பது தான் வேதனையிலும் வேதனை!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ