நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்ற மாணவி ராஜேஸ்வரி யு.பி.எஸ்.சி. தேர்வில் 2ம் இடம் பிடித்துள்ளார்.
நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்ற மாணவி ராஜேஸ்வரி, 2025 ஆம் ஆண்டு UPSC சிவில் சர்வீசஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 2-ம் இடத்தையும், தமிழ்நாட்டில் முதலிடத்தையும் பிடித்துள்ளார். தமிழக அரசின் இலவசப் பயிற்சியின் மூலம் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளாா் மாணவி ராஜேஸ்வாி.
மேலும், நாடு முழுவதும் நடைபெற்ற யு.பி.எஸ்.சி. தேர்வில் 958 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இத்திட்டத்தில் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற 57 பேரில் 50 பேர் இந்த ஆண்டு UPSC தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். மாணவி ராஜேஸ்வரி சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியின் சமூகவியல், முதன்மை தேர்வுத் தொடர் மற்றும் நேர்காணல் வழிகாட்டுதல்கள் உதவியுடன் முக்கியப் பங்காற்றியது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்லாமல், மற்றொரு மாணவர் சிவச்சந்திரன் மாநில அளவில் முதலிடமும், அகில இந்திய அளவில் 23-வது இடமும் பெற்றுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இந்த சாதனை மாணவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். இந்த மாணவா்கள் தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளனா் என்றும் கூறியுள்ளனா்.


