
அரசு நிலத்தை அபகரித்தது தொடர்பான அமைச்சர் பொன்முடி மீதான வழக்கில் சென்னை சிறப்பு நீதிமன்றம் நாளை (ஜூலை 06) தீர்ப்பளிக்கவுள்ளது.
திரையரங்குகளுக்கான டிக்கெட் கட்டணத்தை உயர்த்தக் கோரிக்கை!
கடந்த 1996- ஆம் ஆண்டு முதல் 2001- ஆம் ஆண்டு வரை பொன்முடி போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த போது, சைதாப்பேட்டை அருகே அரசுக்கு சொந்தமான 3,630 சதுர அடி நிலத்தை தமது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, அபகரித்ததாகப் புகார் அளிக்கப்பட்டது. போலி ஆவணங்கள் மூலம் தனது மாமியார் பெயருக்கு பதிவுச் செய்ததாக அமைச்சர் பொன்முடி, அவரது மாமியார் சரஸ்வதி, அப்போதைய அடையாறு சார் பதிவாளர் உள்ளிட்ட 10 பேர் மீது கடந்த 2003- ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது
இதில் சரஸ்வதி உள்ளிட்ட மூன்று பேர் உயிரிழந்த நிலையில், மற்ற ஏழு பேர் மீதும் சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. 90- க்கும் மேற்பட்ட சாட்சிகள், 100- க்கும் மேற்பட்ட ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்தது.
31,008 பள்ளிகளுக்கு காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!
அனைத்து தரப்பு விசாரணையும் நிறைவடைந்த நிலையில், நாளை (ஜூலை 06) தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி ஜெயவேல் அறிவித்துள்ளார்.